தமிழகம்

வேலூர் அருகே மாடு விடும் போட்டியில் ஓடும்போது விழுந்து எருது உயிரிழப்பு

143views
வேலூர் அடுத்த ஊசூர் அருகே உள்ள கோவிந்தரெட்டிபாளையத்தில் மாடு விடும் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியிலிருந்துமாடுகள் பங்கேற்றன. இதில் கோவிந்தரெட்டிபாளையத்தை சேர்ந்த ராமுவின் காளை இதில் பங்கேற்றது. 12 வயதான அந்த காளை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்று இருந்தது. இதற்கு ரசிகர்கள் பாகுபலி என்று பெயர் சூட்டி இருந்தனர். இந்த மாடு இங்கு நடந்த போட்டியில் கலந்துகொண்டு ஒடியது. ஆனால் இறுதி சுற்று ஓடும்போது மூச்சுதிணறிவிழுந்தது. இதனை பரிசோதித்த கால்நடை மருத்துவர் காளை உயிரிழந்துவிட்டது என கூறினர். இதனால் மாட்டின் உரிமையாளரும், ரசிகர்களும் மிகுந்த சோகம் அடைந்தனர்.  அதற்கு இறுதி சடங்கும் செய்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!