தமிழகம்

ஆண்டவனை தவிர யாரிடம் அடிபணியமாட்டேன் ஜல்லிக்கட்டு களத்தில் தொட்டால் தூக்கி எறிவேன்-கருப்பன் பட புகழ் அவனியாபுரம் செவளை காளை.

66views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் காளைகளுக்கு பயிற்சி வழங்குதல் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவனியாபுரத்தை சேர்ந்த என்பவரின் ஜல்லிக்கட்டு காளை கருப்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறது.
செவளை காளை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றாலும் இதுவரை பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் திருச்சி, மணப்பாறை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. களத்தில் திமிரான காளையாக இருந்தாலும் பயிற்சி அளித்து சாமி கும்பிடு என்றதுமே கோவில் முன்பு தனது காலை மடக்கி தலையை கீழே வைத்து சாமி கும்பிடும் நிகழ்வு ஆச்சரியப்படுத்துகிறது,
ஜல்லிக்கட்டு போட்டியில் தொட்டு பிடிக்க முயல்வோரை தூக்கி எறிந்து துவம்சம் செய்யும் செவலை காளை. சாமி கும்பிடு என்றதும் குழந்தை போல் அழகாக தரையில் காலை மடக்கி விழுந்து சாமி கும்பிடுவது பார்ப்பவரை கவரும் வண்ணமாக உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!