தமிழகம்

2021 ம் ஆண்டு அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரருக்கு இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் காரை பரிசாக வழங்கினார்.

61views
தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டி, கடந்த 2021 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற நிலையில், 12 மாடுகளைப் பிடித்த மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது, தற்போது இவழக்கின் தீர்ப்பு மாடுபிடிவீரர் கண்ணனுக்கு சாதகமாக வந்த நிலையில் அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்  மாடுபிடி வீரர் கண்ணனுக்கு 2021 ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கான முதல் பரிசான காரை வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!