தமிழகம்

சிவகாசியில், பிரதமரின் தாயார் மறைவிற்கு பாஜக கட்சியினர் இரங்கல்

52views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. சிவகாசி சிவன் கோவில் முன்பு, பிரதமரின் தாயார் ஹீராபென் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாஜக தலைவர் பாட்டக்குளம் பழனிச்சாமி, மாவட்ட துணை தலைவர் ஒலிம்பிக் செல்வம், மாவட்ட செயலாளர்கள் நாகலிங்கம், குமரி பாஸ்கர், முத்துராமலிங்கம், கோவிந்தன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகச்சாமி உட்பட பாஜக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!