தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிவிரைவு படையினர்.

264views
தமிழக முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் சதி தீட்டும் செயலே முறியடிக்கும் நோக்கில் அரசு சார்பில் அதிவிரைவு படையினர் எனும் ராபிட் ஆக்சன் ஃபோர்ஸ் எனும் படையை உருவாக்கி ஒவ்வொரு மாவட்டமும் தாலுகா பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வந்த அதிவிரைவுப் படையினர் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பதட்டமான இடங்களே ஆய்வு மேற்கொண்ட மத்திய அதிவிரைவு படையினர் (ராபிட் ஆக்சன் ஃபோர்ஸ்) இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்,
கோவையிலிருந்து சுமார் 45 வீரர்கள் குழுவாக அமைந்து உசிலம்பட்டி பகுதியில் எந்தெந்த இடங்களில் பதற்றமான இடம் எனவும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து எழுமலை மல்லபுரம் ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவும் பகுதியாக இருப்பதாக டிஎஸ்பி நல்ல தெரிவித்திருந்த நிலையில் மத்திய அதிவிரைவு படையினர் ஏழுமலை பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர் இதில் சக காவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!