தமிழகம்

குருவருள் இருந்தால் எதையும் சாதிக்கலாம் எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேச்சு

98views
குருவருள் இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். மதுரை அனுஷத் தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் அனுஷ வைபவத்தை முன்னிட்டு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனின் ஸ்ரீ மகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு மதுரை எஸ் எஸ் காலனி எஸ். எம்.கே திருமண மண்டபத்தில் நடை பெற்றது.
இந்த விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசியதாவது உலகத்தில் யாரையும் ஏமாற்றலாம் நம் மனதை ஏமாற்ற முடியாது நாம் செய்கிற நன்மை தீமைகள் நம் மனதில் பதிவாகிறது. நம் வாழ்க்கை பூஜ்யம் போல் இருக்க வேண்டும். பூஜ்ஜியத்திற்கு திசை கிடையாது சதுரம் முக்கோணம் எண் கோணத்திற்கு திசை உண்டு அதனால் தான் சன்னியாசிகளை பூஜ்ஜிய ஸ்ரீ என்கிறோம். வாழ்க்கையில் திசைகளை வென்றவர்களாக இருக்க வேண்டும். 60 தமிழ் வருடங்கள் 27 நட்சத்திரங்கள் 9 ராசிகள் 12 கிரகங்கள் இதை அனைத்தையும் கூட்டினால் 108 வருகிறது. அதனால் தான் 108 தோத்திரங்களாக பகவானுக்கு அர்ச்சிக்கிறோம்.
நாம் வேதம் சொன்னபடி வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும். மனதில் தியானத்தில் ஈடுபடும் போது ஆத்ம சக்தி அதிகரிக்கும். ஸ்ரீராமஜெயம் 18 லட்சம் அளவிற்கு எழுதினால் ஆயுள் கூடும். ஆஞ்சநேயர் அருள் கிடைக்கும். ராமர் என்றால் தர்மம் என்று பொருள். நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அது உங்களை நோக்கி வரும். உங்கள் எண்ணங்களே உங்களை வழிநடத்தும் என்கிறார் பகவான் ரமணர். வாழ்க்கை என்றால் தவறும் சரியும் இருக்கும். ஞானிகளுக்கு எல்லாம் தெரியும் குருவருள் இருந்தால் உலகத்தில் நாம் எதையும் சாதிக்க முடியும். உலகத்தில் பரிபூரணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ மகா பெரியவர்.
நம் குழந்தைகளுக்கு இறைவனின் நாமத்தை வைக்க வேண்டும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனின் நாமத்தை கடைசி காலத்தில் சொல்ல முடியாது அதனால் *அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்* என்கிறார்.இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார். நிகழ்ச்சிக் கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய் திருந்தார். நாளை வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு எஸ் எஸ் காலனி பொன்மேனி நாராயணன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பெரியவா கோவிலில் அனுஷ உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ மகா பெரிய விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!