இலக்கியம்

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம், பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்,  பஹ்ரைனைச் சேர்ந்த முத்தமிழ் சொல்வேந்தர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய, காலமெல்லாம் கண்ணதாசன் மற்றும் நூல்வெளியீட்டு விழா

159views
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம், பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்,  பஹ்ரைனைச் சேர்ந்த முத்தமிழ் சொல்வேந்தர் சங்கம் ஆகியவை இணைந்து காலமெல்லாம் கண்ணதாசன், ஸ்ரீ கங்கா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “SANDWICHED” என்ற ஆங்கில நூல் வெளியீடு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் 27.07.2025 ஞாயிறு மாலை இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
பஹ்ரைன் சொல்வேந்தர் மன்றத்தின் பேச்சாளர் திரு. லஷ்மிநாதன் வரவேற்புரை வழங்க, உரத்த சிந்தனை அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.உதயம்ராம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

பஹ்ரைன்  சொல்வேந்தர் மன்றத்தின் நிறுவனர் திரு.பொன்சங்கர பாண்டியன், தனது தலைமை உரையில், SANDWICHED என்ற‌ நூலில் அதன் ஆசிரியர் ஸ்ரீ கங்கா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியிருந்த கட்டுரைகளை பாராட்டிப் பேசினார்.

திரைப்பட இயக்குநர் திரு. ராசி அழகப்பன் இந்த நூலை வெளியிட்டுப் பேசும்போது, இது எளிமையான‌ ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது என்று பாராட்டினார். நூலின் முதல் பிரதியை நூலாசிரியரின் மகள் செல்வி ஷ்ரத்தா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நூல்களை திரு.மனோகரன், சொல்வேந்தர் லஷ்மிநாதன், பதிப்பாளர் ஜீத்து பிரகாஷ் சங்வானி, உரத்த சிந்தனை தலைவர் பத்மினி பட்டாபிராமன், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக நடிகர், தொலைக்காட்சி பிரபலம் திரு. KPY பாலா கலந்து கொண்டு கலகலப்பாக உரையாற்றினார். தொடர்ந்து, இந்திப் பாடல்களுக்கு கவியரசரின் வரிகளில் பல தமிழ்ப் பாடல்களையும், ஹிந்திப் பாடல்களையும் Dr.லலிதா மோகன் அருமையாகப் பாடினார்

பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. காவிரி மைந்தன் அவர்கள், லலிதா மோகன் பாடிய பாடல்களுக்கு சுவையான இணைப்புரை வழங்கினார். திரு .பொன்.சங்கரபாண்டியன் அவர்களுக்கு “தமிழ்ச் சுடர்”, லலிதா‌மோகனுக்கு “இசைச் சுடர் ” நூலாசிரியர் கங்கா அவர்களுக்கு “எழுத்துச்சுடர்”, மற்றும் திரு.காவிரிமைந்தன் அவர்களுக்கு “கவியரசரின் கவி “ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!