தமிழகம்

சிவகாசி அருகே, கண்களை கட்டிக்கொண்டு ஹாக்கி விளையாடி சாதனை புரிந்த பள்ளி மாணவர்

61views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெள்ளையாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் – சுகிதா தம்பதியின் மகன் தர்ஷன் (12). சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவர் தர்ஷன், ஹாக்கி விளையாட்டு போட்டியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். ஷான் ஹாக்கி அகடாமியில் பயிற்சி பெற்று வரும் மாணவர், நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார். கண்களை கட்டிக்கொண்டு தொடர்ச்சியாக 1 மணி நேரம் ஹாக்கி விளையாடும் சாதனை நிகழ்ச்சியில் மாணவர் தர்ஷன் கலந்து கொண்டு விளையாடினார். சாதனை நிகழ்ச்சியை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் ஒரு மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு, மாணவர் தர்ஷன் ஹாக்கி விளையாடி சாதனை புரிந்தார்.
உலக சாதனை புரிந்த மாணவருக்கு, நோவா உலக சாதனை புத்தகம் அமைப்பின் நிர்வாகிகள் சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் சிவகாசி ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஹாக்கி பயிற்சியாளர் நாகராஜ், சித்துராஜபுரம் ஊராட்சிமன்ற தலைவர் லீலாவதி சுப்புராஜ், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா உட்பட பலர் கலந்து கொண்டனர். மேயர் சங்கீதா இன்பம், உலக சாதனை புரிந்த மாணவருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!