தமிழகம்

பாதுகாப்பாற்ற முறையில் திரிந்த மூதாட்டியை மாவட்ட நீதிமன்ற உத்தரவுபடி மீட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம்

165views
மதுரை மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கிணங்க சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி திரிந்து வந்த முதியவர் ராமலட்சுமி (வயது 62) என்பவருக்கு வழங்கப்பட்ட உத்தரவின் படி அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் மூலம் பராமரிப்பு தொகையுடன் முதியோர் இல்லத்தில் பாதுகாப்புடன் தங்குவதற்கு இன்று மாவட்ட சமூக நல அலுவலர் திருமகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர் வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 வாயிலாக திருநகரில் உள்ள சுரபி அறக்கட்டளை நடத்தும் தாய்மடி முதியோர் இல்லத்தில் முதியவரை சேர்த்து பாதுகாப்புடன் தங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  தாய்மடி இல்ல நிர்வாகி சேதுமுத்துராஜிடம் முதியவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!