தமிழகம்

ராமநாதபுரம் எம்ஜிஆர் நகர் பசுமை கிராமமாக தத்தெடுப்பு : திமுக சுற்றுச்சூழல் அணி ஏற்பாடு

231views
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்ட திமுக. சுற்றுச்சூழல் அணி சார்பில் ராமநாதபுரம் எம்ஜிஆர் நகரில் நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, எம்ஜிஆர் நகரை தத்தெடுத்து மரக்கன்று நட்டு பசுமை கிராமமாக மாற்றும் திட்ட துவக்க விழா நடந்தது . மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ., தலைமை வகித்தார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் முன்னிலை வகித்தார். திமுக., சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முகமது சலாவுதீன் வரவேற்றார். காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கருப்பையா, ஆதித்தன், மண்டபம் கிழக்கு, மத்தி, மேற்கு, ஒன்றிய திமுக செயலர்கள் நிலோபர்கான், முத்துகுமார், பிரவீன், மண்டபம் பேரூர் செயலாளர் ரஹ்மான் மரைக்காயர், மாவட்ட பிரதிநிதி ராஜகோபால், தொழிலதிபர் முகமது அசாருதீன், ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், பைராம் கான், அயலக அணி ஜான் மரைக்காயர் சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் ராஜகோபால், பத்மநாபன், செபஸ்தியான், சங்கர், இந்திரஜித் மதி, காரேந்தல் ஊராட்சி தலைவர் நானா (எ) நாகரத்தினம், செந்தில், ஆல்வின் ஜோசப், கிளை தலைவர் இன்பராஜ், செயலர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பாளர் முகமது சலாவுதீன் செய்திருந்தார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!