தமிழகம்

திருமங்கலம் அருகே நல்லமரம் கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதை, நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறை அதிகாரிகள் நில அளவை செய்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கை.

182views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள நல்ல மரம் கிராமத்தில் சிலர் பொதுப் பாதைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி, கிராம மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதால் , இது குறித்து பலமுறை எச்சரித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அலட்சியப்படுத்தியதால் ,
கிராம மக்களின் நலன் கருதி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நில அளவையர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற உத்தரவின் பேரில், நல்ல மரம் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை நில அளவை செய்து விரைவில் அகற்றும் பணியில் ஈடுபடுவதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .  இப்பணியின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டன.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!