தமிழகம்

மதுரை மாட்டுத்தாவணி அருகே சாலையில் சென்ற மாநகராட்சி லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு: போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

88views
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு மதுரை மாநகராட்சி லாரி சென்று கொண்டிருந்த வளர்நகர் அருகே சென்ற போது லாரியிலிருந்து திடீரென புகை கிளம்பியதால் ஓட்டுநர் லாரியிலிருந்து கீழே இறங்கி சென்ற பொழுது, லாரி முன்பாகம் முழுவது தீப்பிடித்து எரிந்து. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் லாரியில் ஏற்பட்ட தீயை போராடிக் கட்டுப்படுத்தினர்தொடர்ந்து ஓட்டுனர் அளித்த தகவலின் அடிப்படையில் மாட்டுத்தாவணி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!