தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

56views
ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் 2000 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கண்பார்வை குறைபாடு உள்ள நபர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமை திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கபாண்டியன் துவக்கி வைத்தார். உடன் ராஜபாளையம் திமுக வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா, தெற்கு நகர கழக செயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பயனாளிகளுக்கு கண் பார்வை திறன் மற்றும் கண் பார்வைத் திறன் குறைபாடு மருத்துவர்கள் மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!