தமிழகம்

சேலம் அன்னபூர்ணா மருத்துவமனை மற்றும் சேலம் பார்வை இழப்பு தடுத்து சங்கம்நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

75views
சேலம் அன்னபூர்ணா மருத்துவமனை மற்றும் சேலம் பார்வை இழப்பு தடுத்து சங்கம் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தியது. இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் திரு.சின்னதுரை, பேரூர் செயலாளர் திரு. பாலமுருகன், ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் திருமதி. லோகாம்பாள், துணைத் தலைவர் திருமதி .மருதாம்பாள் நாகராஜ்,இளைஞரணி அமைப்பாளர் திரு. பிரகாஷ் ,மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களான முருகேசன், அருண்குமார் , கவிதா சேகர், லதா மணிவேல்,தங்க பாண்டியன், சையது அம்சவர்தினிகுமார், சத்யா செந்தில்,பொருளாளர் மூர்த்தி, வார்டு செயலாளர்கள், மற்றும் கழக நிரவாகிகள் பாலசுப்ரமணியம், செல்வ கிளின்டன், நல்லதம்பி, ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, தனசேகர், சத்யராஜ்,மணிகண்டன் உள்ளிட்டோரும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!