தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், கல்வி கடன் முகாமில் 255 மாணவர்கள் விண்ணப்பம் – ஆட்சியர் தகவல்

47views
விருதுநகர் மாவட்டத்தில் வட்டார அளவில், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் முன்னோடி வங்கிகள் கலந்து கொண்டன. முகாமில் மொத்தம் 255 மாணவ, மாணவிகள் 9 கோடியே, 66 லட்சம் ரூபாய் கல்வி கடன் கேட்டு விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர். உடனடி கல்வி கடனாக 1 கோடியே, 74 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மீதி விண்ணப்பங்களும் விரைவாக பரீசிலனை செய்து மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!