தமிழகம்

பசும்பொன்னில் நாளை தேவர் குருபூஜை அமைச்சர்கள் பங்கேற்பு

52views
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் நாளை (30.10.2022) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 வது பிறந்த நாள் விழா மற்றும் 60 வது குரு பூஜை விழாவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு, ஊக்குளிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் தமிழக அரசு சார்பில் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் நாளை காலை 9 மணியளவில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளனர்.
நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!