தமிழகம்

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தூத்துக்குடியின் தந்தை குருஸ் பர்னாந்து 153வது பிறந்த நாள் கொண்டாட்டம்

158views
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தூத்துக்குடியின் தந்தை குருஸ் பர்னாந்து 153வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் எஸ். ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ கூறியதாவது, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மீனவர் தலைவர்களை நினைவு கூறுவது இதுவே முதல் முறையாகும். இனி வரும் காலங்களில் அனைத்து மீனவ சமுதாய தலைவர்களும் நினைவு கூறப்படுவர். தேசிய மீனவர் காங்கிரஸ் சார்பில் மகாராஷ்ட்ராவில் நவ.21 ல் உலக மீனவர் தினம் கொண்டாடப்படும். ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். தேசிய மீனவர் காங்கிரஸ் மூலம் இந்தியா முழுவதும் உலக மீனவர் தினத்தை கொண்டாட மீனவர் காங்கிரஸ் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நடப்பாண்டு காங்கிரஸ் தொண்டர்கள் நவ.21, உலக மீனவர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவர் என்றார்.
தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி, கடல்சார் மக்கள் நல சங்கமம் பொதுச்செயலர் பிரவீன்குமார் பரதவர், டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!