தமிழகம்

நாலடியார் நூல் திறனறிவு போட்டி மாணவர்களுக்கு தமிழறிஞர் விருது

157views
சேலம் சுதந்திரா இயக்கம் சார்பில் மாநில அளவிலான நாலடி நானூறு எனும் நாலடியார் நூல் திறனறிவு போட்டியில் 400 பாடல்கள் எழுதி சிறப்பித்ததை பாராட்டி சித்தார் கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் ஹ.மு.சையத் அஜாஸ், மாணவிகள்
க.நூருல் ஷிஃபானா,  க. கவி ஸ்ரீ, மு.ஜெஸ்ஸி ஏஞ்சல், மு.சம்ரினா ஆப்ரின், க. கனிகா, 10 ஆம் வகுப்பு மாணவிகள் செ.குணதர்ஷினி, செ. நூருல் மப்ருக்கா,  சா. நிவேகா, ஹூ.ஆயிஷத்துல் லத்திபா, மு. ஆஸிபா, க. கமலி, மு. சூரிய பிரபா ஆகியோருக்கு சேலம் சுதந்திரா இயக்கம் சார்பில் சுதந்திரா தமிழறிஞர் விருது பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விருதுகளை முகமதியா பள்ளிகளின் தாளாளர் ஹாஜா மொய்னுதீன், முகமதியா பள்ளிகளின் செயலாளர் செய்யது அஹமது கபீர், முகமதியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் அலி, உதவி தலைமை ஆசிரியர் ஷாஜகான் சலீம், வழிகாட்டி தமிழாசிரியர் செய்யது இப்ராகிம், ஆகியோர் கலந்து கொண்டு நவ. 14 குழந்தைகள் தினமான இன்று மாணவ மாணவியர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!