சினிமா

தயாரிப்பாளரே நாயகனாக களம் காணும் புதிய படம் ” ஏ 4″ புது இயக்குனர் ரவிகுமார் டி.எஸ் அறிமுகமாகிறார்

55views
” அம்முவாகிய நான்” மற்றும் ” மாத்தி யோசி” ஆகிய படங்களை பி.எஸ்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர் சேகர் சீதாராமன். இவரிடம் ரவிகுமார் டி.எஸ். கதைசொல்லி வாய்ப்பு கேட்டார். கதை மிகவும் நன்றாக இருக்கிறது. உடனே தயாரிப்பில் ஈடுபடலாம் இந்த கதைக்கு யாரை ஹீரோவாக புக் பண்ணலாம்” என்று தயாரிப்பாளர் கேட்க, சற்றும் தயக்கம் இல்லாமல் ” நீங்களே இந்த கதைக்கு பொருத்தமா இருப்பீங்க. நீங்களே நடிக்கலாம்” என்று ரவிகுமார் டி.எஸ். கூறினார். தயக்கம் காட்டிய தயாரிப்பாளரை உற்சாகப்படுத்திய ரவிகுமார் அவரிடம் சம்மதம் பெற்று நாயகனாக நடிக்க வைத்து படப்பிடிப்பை நேர்த்தியாக நடத்தி வருகிறார். படத்திற்கு ” ஏ 4 ” என்று படித்தவர்களிடம் மட்டுமல்ல படிக்காதவர்களிடமும் சரளமாக புலங்கிவரும் வார்த்தையையே படத்தலைப்பாக வைத்துவிட்டார்.. முன்னணி இயக்குனர்களிடம் பயிற்சி பெற்ற ரவிகுமார் டி.எஸ். இதன் கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதிஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா தத்தா, இவர்களுடன் பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். சென்னை, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்
இடைவிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இதற்கு கே.ஏ.ரோமின் ஒளிப்பதிவையும், சிட்டிபாபு கலையையும், மிரட்டல் செல்வா சண்டை பயிற்சியையும், செந்தமிழ் இசையையும், சுப்ரமணியம் படத்தொகுப்பையும், வி.பி. வேல்ராஜன் நிர்வாக தயாரிப்பையும், ஏ. ஆறுமுகம் நிர்வாக மேலாளர் பொறுப்பையும், நித்திஷ் ஸ்ரீராம் மக்கள் தொடர்பையும் கவனிக்கின்றனர்.

படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாகவும் அதற்கும் ஒருபடி மேலாய் சொல்லவேண்டுமென்றால் தீயாய் பற்றிக்கொண்டு நடித்த சேகர் சீதாராமனை கவனித்த இயக்குனர் ரவிகுமார் அவருக்கு ” ஹாட் ஸ்டார்” என்ற பட்டத்தை வழங்க படக்குழுவினரிடம் பேசிவருகிறார் என்பது கூடுதல் தகவலாகும்.
நித்தீஷ் ஸ்ரீராம்
PRO

Right Click & View Source is disabled.

error: Content is protected !!