தமிழகம்

சோழவந்தான் அருகே வெங்கடேசன்.எம்எல்ஏ தலைமையில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விழா.பூமி பூஜை

238views
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் கண்ணுடையாள்புறம் கிராமத்தில் ரூ.35 லட்சம் ரூபாய் பணிகளை எம்.எல்.ஏ வெங்கடேசன் துவக்கி வைத்தார்.
இதன்படி மன்னாடி மங்கலம் ஊராட்சி கண்ணுடையாள்புரத்தில் ரூ.22 லட்சத்தில் , ஒன்றிய துவக்கப்பள்ளிக்கான பூமி பூஜையும்,மன்னாடி மங்கலத்தில் ரூ.33 லட்சத்தில் , அங்கன்வாடி கட்டிடம் மற்றும் கழிப்பறை, சிமெண்ட் களம், பேவர் பிளாக் சாலை ஆகியவற்றிற்கான பூமி பூஜையும் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர் பவுன் முருகன், கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, துணை தலைவர் பாக்கியம் செல்வம், ஊராட்சி செயலர் திருச்செந்தில் ஆகியோர் முன்னிலையில், எம்.எல்.ஏ வெங்கடேசன் பூமி பூஜைகள் செய்தார். இதில் பி.டி.ஓ.கதிரவன்,உதவி பொறியாளர் பூம்பாண்டியன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ்,ஒன்றிய துணை சேர்மன் தனலெட்சுமி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி,தனபாலன்,வசந்த கோகிலா சரவணன்,கார்த்திகா ஞானசேகரன், புதூர் சேகர், வைத்தியர் முருகன்,மணிவேல்,கேபிள் ராஜா,சிறுமணி, வெற்றிச்செல்வன், காமேஸ்வரன்,சசிக்குமார்,பால்கண்ணன், மேல கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்தாண்டி பி ஆர் சி ராஜா சுபேத வாகனம் திருவேடகம் ராஜா என்ற பெரியகருப்பன் குருவித்துறை அலெக்ஸ்.பேரூராட்சி கவுன்சிலர்கள் குருசாமி, செந்தில்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!