தமிழகம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான அன்புகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு நடந்தது.

69views
டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் கொ.அன்புகுமாரின் கருப்பு சிவப்பு கழகங்கள், மரமொதுங்கிய நிழல், தக்கை ஆகிய மூன்று நூல்களை சென்னை பெருநகர மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார் கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட மூத்த தமிழறிஞரும் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளருமான ஈரோடு தமிழன்பன் பெற்றுக்கொண்டார். நூல்கள் குறித்து திருடா திருடி இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, சிட்டிசன் பட இயக்குனர் சரவண சுப்பையா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் எழுத்தாளர் என்.ஸ்ரீராம், பதிப்பாளர் வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருப்பு சிவப்பு கழகங்கள் என்ற நூல் திராவிட இயக்கத்தின் வரலாற்றை தொட்டு, நீதிக்கட்சியில் தொடங்கி ஸ்டாலின் ஆட்சியின் ஓராண்டு வரையிலான அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் பேசுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!