தமிழகம்

சென்னையிலிருந்து மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா பரிசோதனை முகாமை ஆய்வு செய்தார்.

60views
புதிய வகை கொரோனா பிஎஃப் 7 தொற்று பரவலை தடுக்க இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
அதன்படி கடந்த வாரம் முதல் மதுரை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய கொரோனா பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி செல்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் விமான நிலையத்தில் உள்ள கொரோனா பரிசோதனை முகாமை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!