தமிழகம்

தமிழகம்

வாடிக்கையாளர்களிடம் மாநில மொழிகளில் பேசுவதை ‘சொமாட்டோ’ போன்ற நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும்: திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

வாடிக்கையாளர்களிடம் மாநில மொழிகளில் பேசுவதை 'சொமாட்டோ' போன்ற நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழுதுணைத் தலைவருமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார். 'சொமாட்டோ' செயலி மூலம் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று முன்தினம் உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு வந்த உணவு முழுமையாக இல்லாமல் குறைவாக இருந்ததால், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் இணைய தளத்தின் குறைகளைச் சொல்லும் பகுதியில் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு 'சொமாட்டோ' நிறுவன ஊழியர் இந்தி மொழியில் பதிலளித்துள்ளார். அதற்கு தமிழகவாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவிக்க, 'இந்தி நமது தேசிய மொழி. எனவே அனைவரும் அதைச் சிறிதளவு தெரிந்துகொள்ள வேண்டும்' என்று அந்நிறுவன ஊழியர் பதில் அனுப்பியுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக தமிழில் விளக்கம் அளித்துள்ள 'சொமாட்டோ' நிறுவனம், "எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை...
தமிழகம்

மன்னார் வளைகுடாவில் அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும்: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

மன்னார் வளைகுடாவில் அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படை பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா - இலங்கைக்கு இடையே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் தனக்குமட்டுமே சொந்தமானது போல கருதிக்கொண்டு தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. 1980-களின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்வதும், படுகாயம்படுத்துவதும், சிறைப்பிடிப்பதும் அவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கை அரசின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்துக் குரல் எழுப்பியவுடன், அதை திசைத் திருப்பும் வகையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக ஒரு நாடகத்தை ராஜபக்சே அரசு அரங்கேற்றியிருக்கிறது. இதைநான் வன்மையாகக்...
தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதவிப் பிரமாணம் எடுத்துக்...
தமிழகம்

சென்னையில் 100 மின்சார பேருந்துகளை ஜனவரியில் இயக்க பணிகள் தீவிரம்: 6 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைகிறது

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை வரும் ஜனவரியில் இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், 6 இடங்களில் சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்கள் மூலம் முதல்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, ஜனவரியில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில், முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளோம். இதற்காக பயணிகள் அதிகமாக செல்லும் வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம். அதேபோல், சென்னை...
தமிழகம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்!’

தமிழகத்தில், 21ம் தேதி ஆறு மாவட்டங்களுக்கும்; 22ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கும், மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டு உள்ளது.வாய்ப்புசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் மிக கன மழைக்கும்; மேலும் பல மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புஉள்ளது.புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை இடி மின்னலுடன் கன மழை பெய்யும். நாளை மறுநாள் 21ம் தேதி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும். எச்சரிக்கைசேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும்...
தமிழகம்

சங்ககால பெண்பாற் புலவர் இளவெயினிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் – சீமான்

சங்ககாலப் பெண்பாற்புலவர் குறவர்மகள் இளவெயினியின் தமிழ்த் தொண்டினை நினைவுகூரும் வகையில், இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில், குறிஞ்சி நிலத் தமிழ்த்தொல்குடி மரபினைச் சேர்ந்த சங்ககாலப் பெண்பாற்புலவர் குறவர்மகள் இளவெயினியின் தமிழ்த் தொண்டினை நினைவுகூரும் வகையில் யாதொரு நினைவுச் சின்னமும் தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தமிழ்த்தொண்டு புரிந்த அயல்நாட்டவருக்கும் சிலை, மணிமண்டபம் உள்ளிட்டவை அமைத்து போற்றும் தமிழ்நாட்டில், தமிழ் வளர்த்த ஆதிப்பழங்குடி மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதும், அவர்களது சிறப்புமிக்கப் பணிகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் வருவது திராவிட ஆட்சியாளர்களால் நிகழ்த்தபட்ட வரலாற்றுப் பேரவலமாகும். ஐந்திணை நிலங்களில் முதல் திணையான குறிஞ்சி நில மக்கள் குறவர் என்றும், எயினர்...
தமிழகம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் “இல்லம் தேடி கல்வி” என்ற புதிய திட்டம் தொடக்கம்…!

"இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் துவக்கி வைத்தார். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க, இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், 1-8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க, அவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் துவக்கி வைத்தார்.  ...
தமிழகம்

இனி குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிப்பதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனத்திலிருந்து குப்பைகளை எறிபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தரம் பிரிக்கப்படாத குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை ஒரு டன் அளவுக்கு பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தோட்டக்கழிவுகள் மற்றும் மரக்கழிவுகளை பொது இடங்களில்...
தமிழகம்

புதுச்சேரி மாநிலத்திற்குள் நுழைய சீமானுக்கு தடை!!

சீமான் புதுச்சேரி மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என மகிளா காங்கிரஸார் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் . நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தை பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார் . சீமான் காங்கிரஸ் குறித்து பேசுவதை நிறுத்தவில்லை என்றால் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பொருந்தகை எச்சரிக்கை விடுத்திருந்தார் . தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே . எஸ் . அழகிரி சீமான் ஒரு சமூக விரோதி என்றும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்என கூறியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொது செயலாளர் சூசைராஜ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் புதுச்சேரியில்...
தமிழகம்

தனுஷ்கோடியில் நவீன கலங்கரை விளக்கப் பணிகள் தீவிரம்: இலங்கையின் தலைமன்னார் வரை ஒளி தெரியும்

  ராமேசுவரம் அருகே தனுஷ் கோடியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் மூலம் புதிய கலங்கரை விளக்கம் நவீன ரேடார் கருவி வசதியுடன் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பழவேற்காடு தொடங்கி, சென்னை மெரினா, மாமல்லபுரம், பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், கள்ளிமேடு, கோடியக்கரை, அம்மாபட்டினம், பாசிப்பட்டினம், பாம்பன், ராமேசுவரம், கீழக்கரை, பாண்டியன் தீவு (தூத்துக்குடி மாவட்டம்), மணப்பாடு, கன்னியா குமரி, முட்டம் ஆகிய இடங்களில் கலங்கரை விளக்கங்கள் உள்ளன. புயலால் அழிந்து போன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், இந்திய எல்லைப் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்கரைப் பகுதிகளை கண்காணிப்பதற்காகவும் தனுஷ் கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக்...
1 399 400 401 402 403 441
Page 401 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!