சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. முழு பின்னணி!
தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மழை தீவிரம் எடுத்து உள்ளது. நேற்று இரவு கொஞ்சம் பிரேக் எடுத்த மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் தமிழ்நாடு நோக்கி நகர உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் சென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 2015க்கு...