சீனாவில் முதல்முறையாக ஒருவருக்கு ஹெச்10என்3 பறவைக் காய்ச்சல்
'ஹெச்10என்3' எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தீநுண்மியால் மனிதா் ஒருவா் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். எனினும், இதனால் கரோனா போன்ற கொள்ளைநோய் பரவுவதற்கான அபாயம் மிகவும் குறைவு என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் 'ஹெச்10என்3' வகை தீநுண்மி, சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரில் ஒருவருக்குத் தொற்றியிருப்பது முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. 41...