உத்தர பிரதேச மாவட்டங்களுக்கு ஏற்றபடி அரசு கட்டிடங்களுக்கு ஒரே வர்ணம் பூச முதல்வர் அனுமதி: முக்கிய சாலைகளில் உள்ள தனியார் கட்டிடங்களிலும் அமல்
உத்தரபிரதேசத்தின் மாவட்டங்களுக்கு ஏற்றபடி அரசு கட்டிடங்களுக்கு ஒரே வர்ணம் பூசும் திட்டத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதித்துள்ளார். கடந்த 1876-ல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு வந்த விக்டோரியா அரசியை வரவேற்க அதன் கட்டிடங்களுக்கு ரோஸ் வர்ணம் பூசப்பட்டது. அப்போது முதல் சர்வதேச அளவில் ஜெய்ப்பூர் 'பிங்க் சிட்டி (ரோஸ் நகரம்)' என்ற பெயரில் புகழடைந்தது. இந்தவகையில், பாஜக ஆளும் உபியிலும் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான அனுமதியை அம்மாநில முதல்வர்...