கோவையில் இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள்: ஆட்சியா் அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது உள்பட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா். கோவை ஆட்சியா் அலுவலகத்தில் வணிகா் சங்கப் பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோன பரவலைக் கட்டுப்படுத்த...