தமிழே உலக மொழிகளின் தாய் என்பதை தமிழர் நமக்கெல்லாம் உரைத்த மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களின் 123 ஆம் ஆண்டு விழா
சென்னை அடையாறு முத்தையா இராமநாதன் நகரில் இருக்கும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அதன் இயக்குநர் திரு விசயராகவன் அவர்கள் மிகச் சிறப்பாக அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மொழிஞாயிறு எனப்படும் பாவாணர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் அவரை பற்றிய தமிழறிஞர்களின் உரை நிகழ்த்தப்பட்டது. அதில் பாவலரேறு அவர்களின் புதல்வர் துரை. மா பூங்குன்றன், புலவர் அரத்தினவேலனார் , எழுத்தாளர் கண்ணன், வழக்கறிஞர்...