செய்திகள்

தமிழகம்

காட்பாடி கல்புதூர் ஜெயபாலாஜி மகாலில் திருமலை – திருப்பதி அன்னதான கூட சார்பில் 10-ம் ஆண்டு அன்னதானம் !

வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்வில் 10-ம் ஆண்டு அன்னதானம் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு காட்பாடி கல்புதூர் ஜெயபாலாஜி மஹாலில் நடந்தது. திருப்பதி செல்லும் நடைபாதை பக்தர்களுக்கு புரட்டாசி மாதம் முழுவதும் அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை ஸ்ரீ திருமலை - திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் திருமலை – திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் புரட்டாசி மாதம் 1-வது சனிக்கிழமை பூஜை !

வெங்கடேஸ்வர சுவாமிக்கு உகந்த மாதம் புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்கள். புரட்டாசி மாதம் துவங்கி ஒன்று முதல் 5 சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி கும்பிடுவார். அதன் படி புரட்டாசிமுதல் சனிக்கிழமை வேலூரில் உள்ள திருமலை-திருப்பதி தகவல் மையத்தில் உள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் காலை மற்றும் மாலை முழுவதும் விசேஷ பூஜை நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் வரிசையில் நின்று...
தமிழகம்

நானோதொழில்நுட்பத்தில் நவீன கால ஆராய்ச்சிகள் குறித்த கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக 18.09.2024 அன்று நானோ தொழில்நுட்பத்தில் நவீன கால ஆரய்ச்சிகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புவிருந்தினர்களாக தஞ்சாவூர், A.V.V.M. ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, இயற்பியல் துறைத்தலைவர், இணைப்பேராசிரியர் ரவிசந்திரன் மற்றும்...
தமிழகம்

கிம்ஸ் மருத்துவமனை இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை கிம்ஸ் மருத்துவமனை இன்று கோலாகலமாக திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. சென்னையில் நடைபெற்ற கிம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவை சார்ந்து நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு அதை சார்ந்து நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை கிளையை கிம்ஸ் மருத்துவமனையின் தலைவரும் செயற்குழு இயக்குனருமான .எம். ஐ. சகாதுல்லா அவர்களின் சகோதரர் திரு.இக்பால் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்....
தமிழகம்

வேலூர் காகிதப் பட்டறை எலைட் மதுக்கடை மூடல் ! மதுப்பிரியர்கள் சோகம் ! பொதுமக்கள் நிம்மதி !

வேலூர் காதிதப் பட்டறையில் டாஸ்மாக் எலைட் மதுக்கடை இயங்கி வந்த நிலையில் நேற்று திறக்கவில்லை, இதனால் மதுப்பிரியர்கள் சோகத்துடன் திரும்பினர். பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். வேலூர் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கோபி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இவர் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். இதன் படி கடை மூடப்பட்டது. அதேப்போல் காகிதப்பட்டறை பகுதியில் 4 டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு...
தமிழகம்

ஆம்பூர் அருகே கடனை திருப்பி தராததால் ஆத்திரம் 2 குழந்தைகள் கொலை..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு ரோகித் (6) தர்ஷன் (4) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். யோகராஜின் நண்பர் வசந்த்.யோகராஜ் வசந்திடம் ரூ 14 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். கடனை கேட்ட போது காலம் தாழ்த்தி உள்ளார். தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் வசந்த், நண்பர் யோகராஜின் 2 குழந்தைகளை திண்பண்டம் வாங்கி தருவதாக அழைத்து சென்று கொலை செய்து...
தமிழகம்

காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் ஆளுமை குடிமை பணிகளின் நோக்குநிலை கருத்தரங்கம் !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆக்சிலியம் பெண்கள் கல்லூரி கலையரங்கில் ஆளுமை நுழைவாயில் குடிமை பணிகளின் நோக்குநிலை நெறி காட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.  இதில் சிறப்பு விருந்தினராக சென்னை முன்னாள் மேயரும் மனித நேய இலவச ஐஏஎஸ் அகாடமி நிறுவனருமான சைதை . துரைசாமி கலந்து கொண்டார். கேள்விக்கான விடைகளை சரியாக கூறிய மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர்...
தமிழகம்

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருமான சுற்றுச்சூழல் ஹீரோ விருது

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து செப்டம்பர் 18, 2024 அன்று சுற்றுச்சூழல் ஆரோக்கியம் குறித்த ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கின் கருப்பொருள் “திருச்சிராப்பள்ளியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்: சிக்கல்கள், சவால்கள் மற்றும் பாதைகள்." இந்நிகழ்வு நல் உள்ளங்கள் அறக்கட்டளையின் ஆதரவுடன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும் நிலையான தீர்வுகளை முன்மொழிவதையும்...
இந்தியா

இந்திய வெடிமருந்துகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாக Reuters நிறுவனம் பரபரப்புச் செய்தி

இந்திய நிறுவனங்களிடம் இருந்து இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வாங்கும் பீரங்கிகள் & வெடிமருந்துகள் உக்ரைனுக்குத் திருப்பி விடப்படுகிறது இதற்கு இந்தியாவிடம் இருமுறை மறைமுகமாக ரஷ்யா எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையிலும், இந்த வர்த்தகத்தை நிறுத்த இந்திய அரசு இதுவரை முயற்சிக்கவில்லை.  ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக ஆயுதப் பரிமாற்றம் ஓராண்டுக்கு மேலாக நிகழ்ந்து வருவதாக சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி Reuters கூறுகிறது. உக்ரைனுக்கு இந்திய ராணுவப் பொருட்களை அனுப்பும்...
தமிழகம்

வேலூர் புதியதாக கட்டப்படும் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் !

வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனை சுமார் ரூ.150 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வருவதை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வேலூர் கார்த்திகேயன், அணைக்கட்டு நந்தகுமார், வேலூர் மேயர் சுஜாதா, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 2 3 4 5 583
Page 3 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!