செய்திகள்

தமிழகம்

காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி விழா!

வேலூர்,ஆக. 23- வேலூர் மாவட்டம் , காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மலர் மாலை, வெட்டிவேர் மாலை, அருகம்புல் மாலை, பட்டுவஸ்திரம் அணிவித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு !!

தமிழகத்தில் பரவலாக தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள மழை நீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே அரசு உத்தரவின் பேரில் மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுகளாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி வேலூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்தில் உள்ள 7 -வது வார்டில் உதவி ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார்...
தமிழகம்

பொருளியல் மன்றம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, பொருளியல் துறை சார்பாக 13.08.2024 அன்று பொருளியல் மன்றம் துவக்கவிழா நடைபெற்றது. துறைத்தலைவர் நர்கீஸ் பேகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மாரிமுத்து சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர், தூய இருதய கல்லூரி, பொருளியல்துறை, உதவிப்பேராசிரியர் சிவ குருநாதன் கலந்துகொண்டு பொருளியல் மன்றத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர்...
தமிழகம்

திருப்பத்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. படத்திற்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி !!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினராக இருந்த ரமேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார்.   சம்பவத்தன்று நேரடியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை. இந்த நிலையில் ரமேஷ் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு 21-ம் தேதி திருப்பத்தூர் வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி, படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  உடன் அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, மாவட்ட செயலாளர்கள் திருப்பத்தூர் வீரமணி, வேலூர் அப்பு,...
தமிழகம்

சுதந்திர போராட்ட தியாகி தோழர் ஜீவானந்தத்தின்- 118 வது   பிறந்த நாள் விழா

பொதுவுடமைவாதி சுதந்திர போராட்ட தியாகி தோழர் ஜீவானந்தத்தின்- 118 வது   பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 21) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் சமூக சேவகர் தலைமையில் நடைப்பயிற்சி செய்வோர் சங்க தலைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர யு. அருணாச்சலம், அவர்கள் முன்னிலையில் முன்னாள் துணை வேளாண்மை இயக்குனர் இரா. அருள்மோகன் ,...
தமிழகம்

வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) மன்ற துவக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) மன்ற துவக்க விழா 20.08.2024 அன்று நடைபெற்றது. உதவிப்பேராசிரியர் ஞானசுந்தரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி சுயநிதி பாட பிரிவு, இயக்குனர் சபினுல்லாகான் வாழ்த்துரை வழங்கினார். வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை ஒருங்கிணைப்பாளர் நாசர் சிறப்புவிருத்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை, முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி,...
தமிழகம்

வேலூரில் பல்நோக்கு கால்நடை மருத்துவமனை திறப்பு.

வேலூர் தொரப்பாடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடத்தை கானொலி வாழியிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததையெடுத்து ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர், மேயர், மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 15 பயனாளிகளுக்கு உதவி தொகை . ஆட்சியாளர் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 19.08.24 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 15 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், செயலாளர் ஹாஜி.S.முகம்மது பெய்க், இணை செயலாளர்கள் ஹாஜி. A M நூருல் அமீன், ஹாஜி ஜவஹர் அலி , கமிட்டி உறுப்பினர்...
தமிழகம்

இராமேஸ்வரம் மீனவப் பகுதியில் நலத்திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இராமேஸ்வரம் மீனவப் பகுதியில் ரூ.2276.93 இலட்சம் மதிப்பீட்டில் 200 மீட்டர் டி.ஜெட்டி மற்றும் 150 மீட்டர் படகு அணையும் தளம் புதிதாக கட்டப்பட்ட பணிகளையும் மற்றும் குந்துகால் பகுதியில் ரூ.400 இலட்சம் மதிப்பீட்டில் மீன் இறங்கும் தளத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சியின் மூலம் மீனவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த நிகழ்வில் இராமநாதபுரம் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான...
தமிழகம்

ஆங்கில மன்றம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, ஆங்கில துறை சார்பாக 16.08.2024 அன்று ஆங்கில மன்றம் துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் சர்மிளா பானு வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். ஆங்கில மன்ற ஒருங்கிணைப்பாளர் செய்யது அலி பாத்திமா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, காமராஜர் பல்கலைக்கழகம், ஆங்கிலத்துறை தலைவர், ராஜேஷ் கலந்துகொண்டு ஆங்கில மன்றத்தை துவைக்கிவைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் ஆங்கிலத்துறை...
1 11 12 13 14 15 583
Page 13 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!