அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4 மடங்கு காற்று மாசு; சென்னையில் உள்ளூர் காற்றின் தர கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்: ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி அமைப்பு யோசனை
சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4 மடங்கு வரை காற்று மாசு உயர்ந்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த உள்ளூர் காற்றின் தர கண்காணிப்பை அரசு பலப்படுத்த வேண்டும் என்றும் ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது. 'ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி' என்ற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் அனல் மின்நிலையம் அருகில் உள்ள செப்பாக்கம், வேளச்சேரி, தியாகராயநகர் உள்ளிட்ட 20 இடங்களில் கடந்தபிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 24 மணி நேர தொடர் காற்றுத் தர பரிசோதனையை நடத்தியது. ஒரு கனமீட்டர் காற்றில் 2.5 மைக்ரான் அளவுகொண்ட காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு (PM2.5) 60 மைக்ரோகிராம் வரை இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட மாசு அளவை விட 4 மடங்கு அதிகமாக மாசு பதிவாகி இருப்பதாக அந்த...
