தமிழகத்தில் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இமாலய சாதனை!
தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரியில் இருந்து இன்றுவரை தமிழகத்தில் 4 கோடி பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இமாலய சாதனை படைத்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 28 லட்சம் பேருக்கு இன்று ஒரே நாளில் தமிழ்நாடு அரசு சார்பாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 185370 பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பாக அரசு மருத்துவமனைகள் மூலம் 3,79,65,592 பேருக்கும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 2280173...
