இசை பொக்கிஷம் இளையராஜா..மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு..முதல்வர் வாழ்த்து
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் தனக்கென தனக்கென தனி இசை ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் இசைஞானி இளையராஜா. தனது முதல் திரைப்படத்திலேயே "அடி ராக்காயி...மூக்காயி..குப்பாயி... என்ற பாடலில் குழு பெண்களின் கோரஸை வைத்து இசை கோலம் போட்டவர் இளையராஜா. இசைப்பிரியர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இசைஞானி. அவருக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை...உருக்கமாக நன்றி சொன்ன இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பி கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அதன்படி இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையில்...
