தமிழகம்

தமிழகம்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர்

அண்ணா பல்கலைக் கழக 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடந்த விழாவில் 1813 பேர் நேரடியாக பட்டங்களை பெற்றனர். இடப்பிரச்னை காரணமாக பதக்கத்துடன் கூடிய பட்டம் பெறும் 69 பேர் மட்டுமே அரங்கில் உட்கார வைக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் அனைவரும் அரங்கின் அருகில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியின் வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டனர். அவர்கள் விழாவை காண பெரிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 69 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டமளிப்பு விழாவின் உறுதி மொழியை படிக்க மற்ற மாணவ மாணவியர் உறுதி மொழியை படித்து தாங்கள் அமர்ந்திருந்த...
தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படம் இடம்பெற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டும் இடம்பெற்றுள்ளது, பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடி பெயர் மற்றும் புகைப்படத்தைச் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்கிறார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம்...
தமிழகம்

ஆடி அமாவாசை | ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசை தினத்தில் புனித தலமான ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரள்வார்கள் என்பதால் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவிலிருந்தே தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வரத் தொடங்கினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. காலை 9 மணியளவில் அம்பாள் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்தார். பின்னர் ராமநாதபுரம் சமஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின் காலை 11 மணியளவில் அக்னி தீர்த்தக்...
தமிழகம்

குரங்கம்மை பாதிப்பு;பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரள, ஆந்திர எல்லைகளிலிருந்து வருபவர்களுக்கு, குரங்கம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், மேற்கொள்ளப்பட்டுள்ள குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரள, ஆந்திர எல்லைகளிலிருந்து வருபவர்களை, குரங்கம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு எச்சரிக்கையாக பரிசோதனை செய்வது கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறையோடு இணைந்து,...
தமிழகம்

2 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு – காரைக்கால் இடையே ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

காரைக்கால்- பெங்களூரு இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை, கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தபோது நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இரு மார்க்கத்திலும் 25-ம் தேதி (நேற்று) முதல் பயணிகள் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, பெங்களூரு- காரைக்கால் ரயிலானது, பெங்களூருவில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு, ஓசூர் காலை 8.46, தருமபுரி காலை 10.24, சேலம் ஜங்ஷன் நண்பகல் 12.55, சேலம் டவுன் மதியம் 1.12, ஆத்தூர் மதியம் 2.14, தலைவாசல் மதியம் 2.31 மணி என விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் துறைமுகம், சிதம்பரம் வழியாக, காரைக்காலை...
தமிழகம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் திரு K எத்திராஜ் மாநில இணை தலைவராகவும், திரு.M.அபூபக்கர் துணை தலைவராகவும், திருமதி S.கலைவாணி மகளிர் அணி தலைவியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனீ, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கும் சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் களப்பணியார்களை நியமிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் திரு.நரேஷ்குமார் அவர்கள் தலைமையில் கூட்டம் சென்னை 100 அடி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது....
தமிழகம்

மின் கட்டண உயர்வு.. மத்திய அரசை குறைகூறுவதை விடுங்கள் – டிடிவி தினகரன் காட்டம்..

மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு, மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக உட்கட்சி சண்டை பற்றி எதற்கு பேசிக் கொண்டு இருக்க வேண்டும் என்றும், எல்லாம் தானாக முட்டி மோதி ஒரு முடிவுக்கு வரும். அப்போது பேசலாம் என்றார். தொடர்ந்து , அதிமுகவில் இபிஎஸும், ஓபிஎஸும் நிர்வாகிகளை நீக்குவது, மாற்றுவது பற்றி அந்த கட்சி தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும், சம்பந்தமே இல்லாத என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றும் தெரிவித்தார். மேலும், கலைஞர் பேனா நினைவுச் சின்னம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், "அர்ப்பர்களுக்கு வாழ்வு...
தமிழகம்

ஓபிஎஸ் இல்லாத அதிமுக-வை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலை பதில்

ஓபிஎஸ் இல்லாத அதிமுகவை பாஜக ஏற்றுகொள்ளுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை, அதிமுக தொண்டர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அவருடன் எடப்பாடி பழனிசாமியும் உடன் இருந்தார். இந்நிலையில் பிரதமரை எடப்பாடி பழசாமி சந்திப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. திரெளபதி முர்மு இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வில் எடப்பாடி பழசாமி கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அமித்ஷாவை சந்திக்க, வாய்ப்பு கிடைக்காததால் அவர் சென்னைக்கு திரும்புயுள்ளார் என்று எடப்பாடி பழசாமியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் சென்னை வரும்போது, அவருடன் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்....
தமிழகம்

கள்ளக்குறிச்சி வன்முறை: கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தடயவியல் துறையினர் 3வது நாளாக ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தடயவியல் துறையினர் 3வது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைப்பெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். காவலர்கள் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி, பள்ளி வாகனங்கள், மேஜை , நாற்காலி, மாணவர்களின் சான்றிதழ் ஆகியவற்றை தீ வைத்து எரித்தனர். இதில் கிட்டத்தட்ட 67க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானது, வன்முறையில் ஈடுப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் உடலானது இரு முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே...
தமிழகம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி – இன்று முதல் வெளிநாட்டு வீரர்கள் வருகை: தமிழக கலாச்சாரப்படி வரவேற்பளிக்க அரசு ஏற்பாடு

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று முதல் வெளிநாட்டு வீரர்கள் வருகைதர உள்ளனர். அவர்களுக்கு தமிழக கலாச்சாரப்படி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆக. 10 வரை நடைபெற உள்ளது. இதில், 187 வெளிநாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: போட்டிகளில் வீரர்கள் மற்றும் பார்வையாளர் என 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக மாமல்லபுரத்தில் நடந்து வரும் ஏற்பாடுகளை செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் குழுவினருடன் நேற்று ஆய்வு செய்தார். கடந்த ஜூன் மாதம் 19-ம்...
1 466 467 468 469 470 545
Page 468 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!