அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர்
அண்ணா பல்கலைக் கழக 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடந்த விழாவில் 1813 பேர் நேரடியாக பட்டங்களை பெற்றனர். இடப்பிரச்னை காரணமாக பதக்கத்துடன் கூடிய பட்டம் பெறும் 69 பேர் மட்டுமே அரங்கில் உட்கார வைக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் அனைவரும் அரங்கின் அருகில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியின் வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டனர். அவர்கள் விழாவை காண பெரிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 69 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டமளிப்பு விழாவின் உறுதி மொழியை படிக்க மற்ற மாணவ மாணவியர் உறுதி மொழியை படித்து தாங்கள் அமர்ந்திருந்த...
