தமிழகம்

தமிழகம்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழக அரசு

தமிழ் வழியில், அரசு பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஆளுநர் உரையில், இது குறித்து குறிப்பிடுகையில் "தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்" என்று ஆளுநர் அறிவித்திருந்தார். அதன் பின்னர், நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில்...
தமிழகம்

சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடக்கம்!!

மழையினால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 6ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. சாலைகளில் தேங்கிய மழை நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மருத்துவ...
தமிழகம்

சென்னையில் 11 சுரங்கப் பாதைகளை மூடியதால் நூற்றுக்கணக்கான பேருந்து சேவை பாதிப்பு

கனமழையால் சென்னையில் நேற்று 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான மாநகரப் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், சென்னையில் பெரும்பாலான வழித்தடங்களில் நேற்று காலை முதல் குறைந்த அளவிலேயே மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சில வழித்தடங்களில் பேருந்துகள் காலியாகவே சென்றன. மதியத்துக்குப் பிறகு பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தேவைக்கு ஏற்றாற்போல பேருந்துகள் இயக்கப்பட்டன. கனமழை காரணமாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதேபோல், மழைநீரால் சென்னையில் சுரங்கப் பாதைகள் நிரம்பின. எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு வியாசர்பாடி, கணேசபுரம்,...
தமிழகம்

உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழக கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக புதன்கிழமை டெல்டா மாவட்டங்கள் மற்றும் 5 மாவட்டங்களுக்கு அதி பலத்த மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புதன்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ.11-ஆம் தேதி காலை...
தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெறும். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கொடியேற்று விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. எனவே, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படும்.  ...
தமிழகம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையானது அதன் முழுக்கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது. எனவே,வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்று (08.11.2021) மாலை 6.00 மணிக்கு திறந்துவிடப்படுகிறது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. காவிரியில் அதிக நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள்...
தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது, முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் முன்புறமுள்ள கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்கிறார். நாளை மாலை 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம் கோயிலில் நடக்கிறது. இரவில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.  ...
தமிழகம்

“திடீர் மழைப்பொழிவுக்கு இதுதான் மிக முக்கியமான காரணம்” – நவ.6 மழை குறித்து ரமணன் விளக்கம்

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாகவே அதீத மழை பொழிவு இருந்து வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டுமே ஒரே இரவில் சுமார் 20 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில், இதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில் 2015-இல் சென்னையில் பொழிந்த மழை, 2018-இல் கேரளாவில் பதிவான மழை, உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த மழை என வழக்கத்திற்கு மாறாக மழை பொழிவு கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இதற்கான தீர்வு தான் என்ன என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இதற்கான விளக்கத்தை இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'நேர்படப் பேசு' நிகழ்ச்சியில் 'தொடரும் பெருமழை.. வடியாத தண்ணீர்.. எங்கே தவறு? என்ன தீர்வு?'...
தமிழகம்

கனமழையால் பொதுமக்கள் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்: தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: தொடர் மழையால் தாழ்வான சாலைகள் குளம்போல காட்சியளிக்கின்றன. சில இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து செல்வதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து, உணவு, மருந்து வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று, உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: 2015-க்குப் பிறகு 200 மில்லிமீட்டருக்கும் அதிகமழை...
தமிழகம்

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. முழு பின்னணி!

தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மழை தீவிரம் எடுத்து உள்ளது. நேற்று இரவு கொஞ்சம் பிரேக் எடுத்த மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் தமிழ்நாடு நோக்கி நகர உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் சென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 2015க்கு...
1 451 452 453 454 455 498
Page 453 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!