தமிழகம்

தமிழகம்

மதுரையில் ரயில்வே கிராசிங் கேட் அடைத்த பின்னர் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்க தக்க இளைஞர் ரயில் மோதி பலி

திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டு வரையில் செல்ல கூடிய விரைவு ரயில் இன்று மாலை மதுரை ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலானது அழகப்பா நகர் ரயில்வே கிராசிங் அருகே வந்து கொண்டிருந்த போது அப்போது ரயில்வே கேட் அடைக்கபட்ட பின்னர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கதக்க நபர் ரயிலில் மோதி சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதனை அடுத்து ரயில் ஓட்டுநர் சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மதுரை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

சோழவந்தான் தொழிலதிபர் எம் மருது பாண்டியன் ராமேஸ்வரத்தில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவரும் எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான எம் மருதுபாண்டியன் ராமேஸ்வரத்தில் உள்ள மருது சகோதரர்கள் திருஉருவச் சிலைக்கு குரு பூஜையை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் இதனைத் தொடர்ந்துராமேஸ்வரம் நகர அகமுடையார் சங்க நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

லாரி மோதியதில் மின் கம்பம் சேதம் உரிய நேரத்தில் மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியர்களால் பெரும் அசம்பாவிதம் தவிர்த்து

மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் நுழைவாயில் மின்கம்பம் ஒன்று உள்ளது இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக லாரி ஒன்று அந்த மின் கம்பத்தில் பின்பகுதியில் மோதியது மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து தொங்கியது. உடனடியாக மதுரை அரசர் அடி உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.  விரைவாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் உடனடியாக வேறு மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் ஆனது தடைப்பட்டது மின்வாரியர்களின் துரித செயல்பாட்டால் மின் வயர்கள் அறுந்து கீழே விழுவதற்கு முன்னே மின் இணைப்பை உடனடியாக துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. செய்தியாளர் :...
தமிழகம்

திருமங்கலம் அருகே மருது சகோதரர்களுக்கு மணி மண்டபம் அமைக்க திமுக சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதி – (மருது சகோதரர்களுக்கு வெண்கல சிலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை )

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலங்குளம் கிராமத்தில், மருது சகோதரர்களின் சிலைகளுக்கு அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன்,மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து மருது சகோதரர் சிலைகளை பாதுகாக்கும் விதமாக மணி மண்டபம் அமைப்பதற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ரூபாய் 5 லட்சம் நிதியை மாவட்ட செயலாளர் மணிமாறன் கிராம மக்களிடம் வழங்கினார். இந்நிலையில் கிராம மக்கள் மருது சகோதரர்களுக்கு வெண்கலச்சிலை அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவு பெற்றபின் அதற்கான பணியினையும் நிறைவேற்றுவதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகள் பட்டறிவு பயணம்

திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2022 -2023 திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய விவசாயிகள் பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. திருப்புல்லாணி வட்டாரத்தில் இருந்து களரி, லாந்தை உத்திரகோசமங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பட்டறிவு பயணத்தில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். தெற்கு தரவை கிராமத்தில் வேளாண்மை பயிர்களுடன், தோட்டக்கலை பயிர் மற்றும் ஆடு, மாடு, கோழி மற்றும் புறா வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு ஆகிய தொழில்நுட்பங்களை மேற்கொள்ளும் விவசாயி பாலு அவர்களின் பண்ணையை விவசாயிகள் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர். தீவன சோளம் பயிரிடும் முறைகள் மற்றும் ஆடு, மாடு ஆகியவற்றிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் குடல்புழு நீக்கம் செய்தல், சத்தான உணவு அளிக்கும் முறைகள் தொடர்பாக விவசாயிகளின்...
தமிழகம்

தேனியில் ஒன்றிய பாசிச பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக இளைஞர் மாணவர் போராட்டம்.

இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் 27.10.2022 இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி பழைய பேருந்து நிலையம் நுழைவாயில் முன்பு மாலை 5.30 மணியளவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் இரா.தமிழ் பெருமாள், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செ.ஆனந்த் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்ட துணைச் செயலாளர் சு.சரவணபுதியவன், மாவட்ட துணைத் தலைவர் த.வீரையா, மாதர் சங்க மாவட்ட தலைவர் அழகேஸ்வரி, AISF மாவட்ட துணைச் செயலாளர் மூ.ஹரிஹரன், மாவட்ட துணைஞ தலைவர் கே.எம்பாலாஜி, சேதுபதி, க.ரமேஷ் சோ.மாரீஸ்வரன், ம.சுர்ஜித், சே.சந்துரு,ச.தாமஸ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

உசிலம்பட்டிப் பகுதியில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி.கிலோ ரூ5க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டி நடுப்பட்டி கன்னியம்பட்டி கள்ளபட்டி உச்சப்பட்டி பொட்லுப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளனர்.வெண்டைக்காய் தற்போது விளைந்து நல்ல விளைச்சல் ஏற்ப்பட்டுள்ளன. இவை விற்பனைக்காக விவசாயிகளால் உசிலம்பட்டி தினசரி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகின்றன.கடந்த வாரம் வரை கிலோ ரூ20 முதல் ரூ30 வரை கொள்முதல் செய்யப்பட்ட வெண்டைக்காய் வரத்து அதிகமானதால் தீபாவளி பண்டிகை முதல் கிலோ ரூ 4 முதல் ரூ5 வரை கொள்முதல் செய்யப்படுகின்றன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த விலையில் விற்றால் தங்களின் கூலி வண்டி வாடகைக்கூட கட்டாத சூழ்;நிலை உருவாகியுள்ளது.எனவே அரசு கவனத்தில் எடுத்து வெண்டைக்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கிராமப்பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று எந்த மாதத்தில் எதை பயிரிட...
தமிழகம்

பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கம்

ராமநாதபுரம், அக்.27- சர்வதேச பெண்கள் அமைப்பான ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கம் நேஷனல் அகாடமி பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தலைவி கவிதா செந்தில்குமார் தலைமை வகித்து வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளிடம் உரை ஆற்றினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் பேசினார். மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து டாக்டர் கனகப்பிரியா, மனநலம் குறித்த ஆலோசனைகளை டாக்டர் ரம்யபிரியா, ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்து டாக்டர் ராசிகா விழிப்புணர்வு உரை ஆற்றினார். பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பருவ மாற்றங்கள் குறித்து டாக்டர் ஆயிஷதுல் நஸிதா விளக்கம் அளித்தார். ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட், ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட்...
தமிழகம்

பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் மாமன்ற உறுப்பினர் மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரி கொசுக்கடி துர்நாற்றத்தில் இருந்து விடியல் கிடைக்காதா என தவிக்கும். 72 வது வார்டு மக்கள்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வது வார்டு பைக்காரா அரசினர் காலணி குடியிருப்பு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை நீர் சாலையில் ஆறு போல வழிந்து ஓடுகிறது மேலும் இதில் மழை நீரும் சேர்ந்து கொண்டு பாதாள சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் அடைத்துக் கொண்டு உள்ளது.  அப்பகுதி மாமன்ற உறுப்பினர் இடமும் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்த போது நான் அரசினர் காலனி பக்கம் ஓட்டு கேட்கவில்லை அதனால் பிரச்சனைக்கு தீர்வு செய்ய எனக்கு அவசியம் இல்லை எனவும் அலட்சியமாக கூறியுள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாற்று வைக்கின்றனர். பாதாள சாக்கடை நீர் சாலையில்...
தமிழகம்

சோழவந்தானில் வைகை ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் மருதுபாண்டியர் குருபூஜை விழா

மதுரை மாவட்டம் சோழவந்தானில்.மாமன்னர் மருதுபாண்டியரின் குருபூஜை விழாவை முன்னிட்டு சோழவந்தான் வைகை ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் வைகைஆட்டோ உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்ட பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்  ...
1 451 452 453 454 455 545
Page 453 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!