தமிழகம்

தமிழகம்

திருமண வாழ்த்து

தேனி மாவட்டம் பெரியகுளம் தி.மு.க.ஒன்றிய பெரும் தலைவர் தங்கவேலுவின் மகன் திருமணம் அண்மையில் லட்சுமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. மரியாதை நிமித்தமாக திமுக கட்சியை சேர்ந்த முன்னாள் நகர துணைச் செயலாளர். A. அப்பாஸ்கான், SV.மணி, பெரியகுட்டி(எ)சண்முகசுந்தரம், சந்தேசம், ஆட்டோ ரவி, பழனிவேல், அக்கீம்.கழக முன்னோடிகள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

பள்ளிக்குழந்தைகளுக்காக ஒண்றிணைந்த திமுக-அதிமுகவினர். கலையரங்கம் கட்ட போட்டிபோட்டு சொந்த நிதி வழங்கினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டையில் உள்ளது நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி.  அரசு உதவி பெறும் பள்ளியான இப்பள்ளியில் சுமார் 1200க்கும் மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் கலையரங்கம் (விழா மேடை) கட்ட வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையறிந்த உசிலம்பட்டி திமுகவைச் சேர்ந்த நகர்மன்றத்தலைவர் சகுந்தலா கலையரங்கம் அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்களை தனது சொந்த செலவில் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். இதனையடுத்து இன்று கலையரங்கம் அமைக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் நகர்மன்றத்தலைவர் சகுந்தலா உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நகர் மன்றத்தலைவர் கட்டுமானப் பொருட்கள் சொந்த செலவில் வாங்கித் தருவதை அறிந்த அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கட்டுமானத்திற்கான கூலிச் செலவை தனது சொந்த செலவில் தருவதாக ஏற்றுக் கொண்டார்.இவர்களின் செயல் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு...
தமிழகம்

கடந்த 10 மாதங்களில் சிங்கபூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் விமானம் மூலம் 63.766 பயணிகள் மதுரை வருகை

மதுரை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 26ம் தேதி வரை 63 ஆயிரத்து எழுநூற்றி அறுபத்து ஆறு வெளிநாட்டு பயணிகள் மதுரை விமான நிலையம்  வந்தடைந்தனர். இவர்களுக்கு சுகத்தாரத்துறை சார்பில் மதுரை விமான நிலைய பரிசோதனை முகாமில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. பயணிகளின் விகிதாசார அடிப்படையில் 2 ஆயிரத்து 46 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  இதில் 31 பயணிகளுக்கு கொரான தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  கொரான தொற்று பரவும் அபாயகரமா நாடுகளில் இருந்து வந்த 1 பயணிக்கும். கொரானா தொற்று அபாயமில்லாத நாடுகளில் இருந்து வந்த 30 பயணிகளும் இதில் அடங்குவர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

அழகப்பா பல்கலை., கல்லூரி இடையே செஸ் போட்டி

அழகப்பா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை ராஜா கலை, அறிவியல் கல்லூரி வளாக உள்ளரங்கில் நடந்தது. ஆடவர், மகளிர் பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டன. போட்டியை கல்லூரி செயலாளர் டாக்டர் தில்லை ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.  ஆடவர் பிரிவில் பரமக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி, அழகப்பா கலை, அறிவியல் கல்லூரி முதல், இரண்டு இடம் பிடித்தன. மகளிர் பிரிவில் அழகப்பா கலை, அறிவியல் கல்லூரி, இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹுசேன் கலை, அறிவியல் கல்லூரி முதல், இரண்டு இடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராஜா குழும நிறுவனரும், மண்டபம் பேரூராட்சி சேர்மனுமாகிய சேவா ரத்னா டி.ராஜா, டிரஸ்டி ஜெயந்தி ராஜா ஆகியோர் பரிசு கோப்பை வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி...
தமிழகம்

பக்கவாதத்திற்கு சிகிச்சை அடுத்த நொடியிலேயே தேவை : அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர்கள் வலியுறுத்தல்

பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதாக பிரபல மருத்துவர்கள் வலியுறுத்தினர். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிடத்திலும் சுமார் 19 லட்சம் நரம்புகளும், 10 நிமிடத்திற்குள் சுமார் 2 கோடி நரம்புகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதால் பக்கவாதத்திற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மதுரை அப்போலோ மருத்துவமனையில் "பக்கவாதம் & முடக்குவாதம் : கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்புக்கான விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இந்தக் கருத்தரங்கில் டாக்டர்கள் மீனாட்சி சுந்தரம் - மூத்த நரம்பியல் நிபுணர், எஸ்.என்.கார்த்திக், சுரேஷ், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஷ்யாம், டாக்டர் கெவின் ஜோசப், நரம்பியல் நிபுணர் சுந்தர் ராஜன், கதிரியக்க நிபுணர் ஜான் ராபர்ட், எமர்ஜென்சி பிரிவு மருத்துவர் ஜூடு வினோத் அப்போலோ...
தமிழகம்

ராமநாதபுரத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு நகராட்சி தலைவர் மரியாதை

ராமநாதபுரம், அக்.27- மருதுபாண்டியர் குருபூஜையை யொட்டி ராமநாதபுரத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு நகராட்சி தலைவர் கார்மேகம் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் வண்டிகார தெரு அகமுடையார் இளைஞர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாமன்னர் மருதுபாண்டியர் உருவ படத்திற்கு நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நகர்மன்ற உறுப்பினர் காளிதாஸ், திமுக வார்டு செயலாளர்கள் வசந்தகுமார், இன்ஜினியர் மருதுபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அரசு சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

உத்தமபாளையம் தனியார் மண்டபத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அவர்கள் தலைமையில், வட்டார திட்ட அலுவலர் திருமதி விஜயா அவர்கள் முன்னிலையில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் போல் சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர், உத்தமபாளையம் சேர்மன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேவாரம் சுகாதாரத் துறை மருத்துவர் அனுசியா அவர்களும், சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள், திருமதி, சுப்புலட்சுமி திருமதி, ஈ.ஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் அருள் பிரேம், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்  ...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, வரும் சனி கிழமை மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மின் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில், நாளை மறு நாள் 29ம் தேதி (சனி கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த மின் நிலையத்தில் இருந்து பயன்பெறும் வத்திராயிருப்பு, பிளவக்கல் அணைப்பகுதி, கான்சாபுரம், மகாராஜபுரம், கூமாப்பட்டி, கோட்டையூர், புதுப்பட்டி, துலுக்கப்பட்டி, தம்பிப்பட்டி, அக்கனாபுரம், புதூர், தைலாபுரம், சுந்தரபாண்டியபுரம், அத்திக்கோவில், கிழவன்கோவில், சீலநாயக்கன்பட்டி, கொடிக்குளம், தாமரைக்குளம், ராமசாமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், சனி கிழமை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். செய்தியாளர்:  வி காளமேகம்...
தமிழகம்

சிவகாசியில், தீக்குளிக்க முயன்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் காவல்நிலைய ஆய்வளராக சுபகுமார் பணியாற்றி வருகிறார். இந்த காவல் நிலையத்தில், செல்லம்மாள் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம், கைதி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிவகாசி நகர் காவல் நிலையத்திலிருந்து, கைதியின் பாதுகாப்பு பணிக்காக ஆய்வாளர் சுபக்குமார், காவலர்களை நியமித்தார். இதில் மருத்துவமனை பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறு காவலர் செல்லம்மாளுக்கு உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதிப்பு உள்ள கைதியின் பாதுகாப்பு பணிக்கு செல்ல முடியாது என அவர் கூறியதையடுத்து, ஆய்வாளர் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார். தன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறிய காவலர் செல்லம்மாள், காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளர் சுபக்குமாரிடம் பேசியுள்ளார். அப்போது திடீரென்று செல்லம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் துணை மேயர்,மண்டல தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

நிதி நிலை சீராகும் வரை சாக்கடை, குடிநீர், சாலை பணிகளுக்கு மாமன்ற உறுப்பினர்களில் கோரிக்கையை செயல்படுத்தி தர- துணை மேயர் நாகராஜன் திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் மாமன்ற உறுப்பினர்கள் கட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன். மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி உதவி ஆணையர் சையது முஸ்தபா கமால் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை மாநகராட்சி அனைத்து பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது பகுதி மக்களின் குறைகளை அதிகாரிகளுக்கும்., மண்டல குழு தலைவருக்கும்., துணைமேயருக்கும் எடுத்துரைத்தனர். கடந்த ஆறு மாத காலமாக மக்கள் பிரச்சனைகள் எதுவும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்றும்., குடிநீர் வசதி., கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி., தெருவிளக்கு வசதி என எந்த வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை., வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால்...
1 450 451 452 453 454 545
Page 452 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!