தமிழகம்

தமிழகம்

அரசு மேல் நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்த ஆண்டிப்பட்டி எம் எம்எல்ஏ மகாராஜன்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, குன்னூர் பகுதி 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இன்று ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியினர் அமைச்சர் கயல்விழி குன்னூர் அரசு மேல் நிலைப் பள்ளி திடீரென ஆய்வு மேற்கொண்டார், அப்போது குன்னூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் மழை காலங்களில் மழைநீர் தேங்குகிறது. மாணவ, மாணவிகளுக்கு போதிய விளையாட்டு மைதானம் இல்லாதது குறித்து அமைச்சரிடம் கேட்ட போது உடனடியாக செய்து தரப்படும் என்று தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் இந்த பகுதி நீர் பிடிப்பு பகுதி எனவே பள்ளிக்கு கூடுதல் வசதிகள் செய்து தர முடியாது என தெரிவித்தார். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கிராமத்தை நீர் பிடிப்பு பகுதி என்று தெரிவித்தது வேதனை அளிக்கிறது. அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து...
தமிழகம்

தேனிமாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற உலக உணவு தின விழா

தேனிமாவட்டம் கம்பத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு "கம்பம் அல் அஜ்கர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி" யில்  பெற்றோர்கள் கலந்து கொண்டு உணவு தயார் செய்யும் போட்டியில் நிகழ்ச்சியில்   சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் தலைமை மருத்துவர் டாக்டர் சையது சுல்தான் இப்ராஹிம் MBBM MD , Ex JD , அரசு மருத்துவர் Dr .சிராஜ் தீன் , பள்ளி தாளாளர் நைனார் முகமது , பள்ளி முதல்வர் அகமது மீரான் , கம்பம் சாதிக் MC ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். செய்தியாளர்: A. சாதிகபாட்சா, தேனி  மாவட்டம்   ...
தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியதை ஆதாரத்துடன் நிரூபித்தால் நாங்கள் அனைவரும் சாமியாராகி விடுகிறோம் என சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பன்னீர் செல்வம் தலைமையில்  அதிமுகவினர் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு செல்வது குறித்தும் பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் பேசும் போது; 90 சதவீதம் அதிமுக நிர்வாகிகள் தன் பக்கம் இருப்பதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி ஏன் தங்க கவசத்தை மீட்டு கொண்டுவர முடியவில்லை. நல்ல ஆம்பளையாக இருந்தால் பசும்பொன் வந்து பார் என சவால் விட்டார். மேலும் ஓபிஎஸ் ஸ்டாலினிடம் பேசிய ஆதாரம் நிரூபித்தால் ஓபிஎஸ் அணியிலிருந்து அனைத்து நிர்வாகிகளும் சாமியாராக சென்று விடுவோம் பசும்பொன் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை செருப்பால் அடித்து...
தமிழகம்

பசும்பொன்னில் டிஜிபி ஆய்வு போலீசாரிடம் குறை கேட்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி, 60 வது குருபூஜை விழா பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பசும்பொன் கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார். கமுதி ரஹ்மானியா கார்டன் உயர்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள ஆண் போலீசார், சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள பெண் போலீசாரிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு போலீசாருக்கு சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு பரிசோதித்தார். தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனம், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் உடன் இருந்தனர். நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம், மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ்பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியவுடன், மாமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள திமுக உறுப்பினர்கள், மாநகராட்சியில் சுகாதாரப் பணிகள் முற்றிலும் நடைபெறாத நிலை உள்ளது என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு போதிய வாகன வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் ஆணையாளர், மேயர், துணை மேயருக்கு புது கார்கள் வாங்கியது அவசியமா என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி பொது நிதியிலிருந்து கார்கள் வாங்கப்படவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி நிதியில் இருந்து தான் கார்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார். பெரும்பாலான உறுப்பினர்கள்...
தமிழகம்

காதலித்த பெண்ணை கர்ப்பிணியாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மணமகனை கையும், களவுமாக பிடித்த காதலி , காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள எஸ் எம் பி கல்யாண மஹாலில், இன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை திருமணம் செய்வது தொடர்பாக, திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமிக்கும் , மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதை அறிந்த, சின்னசாமியின் முன்னால் காதலியான நாகப்பிரியா, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் ஆட்டோ தொழிலாளியான இவருடைய மகளாவார். .சின்னச்சாமி பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், சிவில் இன்ஜினியர் படித்து முடித்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் நாக பிரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெறாமல் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது .இதனிடையே தான் சின்னச்சாமி நாக பிரியா - வை காதலித்து கர்ப்பம் ஆக்கியுள்ளார். நாகப்பிரியாவும், சின்னச்சாமியும் உறவினர்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில் ,...
தமிழகம்

திருமங்கலம் அருகே நல்லமரம் கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதை, நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறை அதிகாரிகள் நில அளவை செய்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள நல்ல மரம் கிராமத்தில் சிலர் பொதுப் பாதைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி, கிராம மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதால் , இது குறித்து பலமுறை எச்சரித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அலட்சியப்படுத்தியதால் , கிராம மக்களின் நலன் கருதி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நில அளவையர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற உத்தரவின் பேரில், நல்ல மரம் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை நில அளவை செய்து விரைவில் அகற்றும் பணியில் ஈடுபடுவதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .  இப்பணியின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டன. செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 108 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூபாய் 81 இலட்சம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல்

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி மேலூர் ஊராட்சி ஒன்றியம், கிடாரிப்பட்டி மற்றும் ஏ.வலையப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள உற்பத்தியாளர் குழுக்களைச் சாரந்த உறுப்பினர்களுடன் திட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்தாவது:- தமிழ்நாடு அரசு ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்...
தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு கேடயம் பரிசு அமைச்சர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்

தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரை காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவுக்கு மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சச்சின் சிவாவுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து கேடயம் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் "வட கிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க உள்ளது, அரசின் மெத்தன போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார், வட கிழக்கு...
தமிழகம்

அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில்.42 லட்சம் மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வலையபட்டி ஊராட்சி மற்றும் பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத் திட்ட பணிகளை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வடக்குமாவட்ட திமுக அவைத் தலைவர் எம் ஆர் எம் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன். வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதய சந்திரன். முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் அலங்காநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ். பாலமேடு பேரூராட்சி துணைத் தலைவர் ராமராஜ் . ஒன்றிய கவுன்சிலர் பவானி தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் முதலில் பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெண்களுக்கான இலவச பொது...
1 448 449 450 451 452 545
Page 450 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!