தமிழகம்

தமிழகம்

ரூ.82 கோடி வருமான வரி செலுத்துமாறு ஓபிஎஸ்-க்கு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸூக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித் துறை சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கடந்த 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.20லட்சமும், 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.82.12 கோடியும் வரியாகசெலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. வருமான வரித் துறையின் இந்த நோட்டீஸை ரத்து செய்யவும்,மேல் நடவடிக்கைக்கு தடைவிதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதிபி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது....
தமிழகம்

தமிழகம் முழுவதும் இன்று.. 11வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 11வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி...
தமிழகம்

ஜெயலலிதாவின் வேதா இல்லம்’ யாருக்கு சொந்தம்? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது' என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு கடந்த அ.தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் உள்ள பொருள்களைக் கணக்கிடும் பணிகள் நடந்தன. தொடர்ந்து சட்டம் இயற்றப்பட்டு வேதா இல்லத்தையும் அங்குள்ள அசையும் சொத்துகளையும் கடந்த அ.தி.மு.க அரசு அரசுடமையாக்கியது. தமிழ்நாடு அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபாவும் தீபக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், வேதா இல்லத்துக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.67 கோடியே 90 லட்ச ரூபாயை நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர்....
தமிழகம்

பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்று பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 'அடல் டிங்கரிங்ஆய்வகம்' தொடக்க விழா நடைபெற்றது. அடல் டிங்கரிங் ஆய்வகம் என்பது, மாணவர்களின் அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கான நவீனஉபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் ஆகும். இந்த ஆய்வகத்தை தொடங்கி வைத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது: இந்த அரசுப் பள்ளியில் 900 ஆக இருந்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. அண்ணா பிறந்த மண்ணில் அரசுப் பள்ளியின் வளர்ச்சி மகிழ்ச்சிக்குரியது. அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர முன்னுரிமை அளிக்க...
தமிழகம்

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: முழு விவரங்களுடன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமைகள் மைய இயக்குநருமான பி.புகழேந்தி தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரிப் பொருட்கள், மருத்துவ உதவிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது போலவும், கைதிகளுக்கு சம்பளம் கொடுத்தது போலவும் போலியாக கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது. உண்மையில் ஆயிரக்கணக்கில் பொருட்களை தயாரித்துவிட்டு லட்சக்கணக்கில் அவற்றை விற்றுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். இதில் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை டிஜிபி, தமிழக உள்துறைச் செயலர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே...
தமிழகம்

சமூக வலைதளங்களில் செய்தி பரவியதால் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக அனுரத்னா மீண்டும் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் விசாரணை நடத்தி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக (பொறுப்பு) கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர் அனுரத்னா. இவர், தலைமை மருத்துவர்பொறுப்புக்கு வந்த பிறகு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதனால், பொன்னேரி சுற்று வட்டார மக்களின் அன்பை பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்,நவீன மருத்துவ உபகரணங்களை கையாள்வது தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்த பயிற்சி காலங்களில், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை (பொறுப்பு) மருத்துவராக விஜய் ஆனந்த் நியமிக்கப்பட்டார். மருத்துவர் அனுரத்னா பயிற்சிமுடிந்து கடந்த 13-ம் தேதி மீண்டும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். ஆனால், அவர் ஏற்கெனவே இருந்த பதவியை தொடர விடாமல், அவரை விட பணியில் 5 ஆண்டுகள் ஜூனியரான விஜய் ஆனந்த் அப்பணியை தொடர்ந்து...
தமிழகம்

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாது என்று தமிழக அரசு சொல்வதில் நியாயம் இல்லை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

பெட்ரோல், டீசல் மீதான வரியை பெரும்பாலான மாநிலங்கள் குறைக்கும்போது, தமிழக அரசு மட்டும் குறைக்க முடியாது என்று கூறுவது நியாயமற்றது என அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பெட்ரோல் மீதானவரியை லிட்டருக்கு ரூ.5, டீசல்மீதான வரியை ரூ.10 குறைத்துள்ளது. இதை பின்பற்றி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உட்பட 25 மாநிலங்களின் அரசுகளும் மதிப்புக் கூட்டு வரியை கணிசமாக குறைத்துள்ளன. அதன்படி, தமிழகத்திலும் வரியை அரசுகுறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், '2014-ல் இருந்தஅளவுக்கு பெட்ரோல், டீசல்மீதான வரியை மத்திய அரசு குறைத்தால், மாநிலங்களின் வரிதானாகவே குறைந்துவிடும்' என்றுதமிழக நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் கூறியுள்ளார். இதுஅத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைக்கும்போது தமிழக அரசு மட்டும்...
தமிழகம்

“சுவாச பாதை தொற்று”.. கொரோனாவோடு அட்மிட் ஆன கமல்ஹாசன்

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு இடையில் சமீபத்தில் பல்வேறு பணிகளுக்காக இவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு! இந்த நிலையில் சென்னை திரும்பி வந்தவருக்கு செய்யப்பட்ட மருத்துவ சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இதுகுறித்து செய்துள்ள ட்வீட்டில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கொரோனா காரணமாக...
தமிழகம்

இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் 111 கோயில்களின் முப்பரிமாண காட்சியை காணலாம்

தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே, பக்தர்கள் வசதிக்காக பூஜைகளை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்வது, இ-உண்டியலில் காணிக்கை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள், அறநிலையத் துறையின் இணையதளத்தில் உள்ளன. இதுமட்டுமின்றி, கோயில்களின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்கும் வசதி, கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 77...
தமிழகம்

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எஞ்சிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், 24 மற்றும் 25-ம் தேதிகளில்...
1 448 449 450 451 452 498
Page 450 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!