தமிழகம்

செய்திகள்தமிழகம்

கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜாகவினர்.. இனிப்பை கொடுத்து விடுதலையை கொண்டாடினர்..

பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜகவினர் அண்ணாமலை விடுதலை ஆன செய்தி வந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினர் சென்னையில்...
தமிழகம்

சிவகாசி பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடையூறுகளை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளில் சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபட்டனர். இன்று காலை, நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் குழுவினர் நமஸ்கரித்தான்பட்டி, மானகசேரி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில், வெள்ளம் ஏற்படும் காலங்களில் பொதுமக்களை பத்திரமாக மீட்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும் மழை காலங்களில் நீர் நிலைகளில் ஆபத்தான வகைகளில் விளையாட வேண்டாம் என்று அந்தப்பகுதி மக்களிடம் வலியுறுத்தி கூறினர். நீர் நிலைகளில் யாரேனும் சிக்கிக் கொண்டால், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்பார்கள் என்று கூறினர். தொடர்ந்து சிவகாசியின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது....
தமிழகம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

தமிழக ஆளுநர் ரவி உளறல்வாதி அவர். சனாதான சக்தி என .இந்துத்துவ பிரச்சாரம் செய்கிறார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உண்மை குற்றவாளிகை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தமிழக காவல்துறை- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த மதிமுக பொதுச்சாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு கோவைகுண்டு வெடிப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு உலகத்தில். பல்வேறு நாடுகளில் இப்படிபட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன. துல்லிய அறிவும், கண்டுபிடிப்பும் கொண்டிருக்ககூடிய நாடுகளில் நடைபெறுகிறது. என்றால் அங்கே உளவுத்துறை கெட்டுவிட்டது. கடமை தவறிவிட்டது. என்று சொல்லமுடியுமா? முதலமைச்சர் உடனடியாக மின்னல் வேகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் கோவைக்கு அனுப்பி அடையாளம் தெரியாமல் கருகி இருந்த உடலை வைத்து இவர்தான் சம்பத்தப்பட்ட நபர் என கண்டுபிடித்து வீட்டில் போய் ஆதாரங்களை தேடி...
தமிழகம்

ஆசிரியர்களுக்கு பணி ஓதுக்கீடு உத்தரவு: மேயர்:

மதுரை மாநகராட்சி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், வழங்கினார்.  மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து கல்வி உபகரணங்கள் மாநகராட்சியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.  அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக மாநகராட்சி ஈ.வெ.ரா.பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கணக்கு), திரு.வி.க....
தமிழகம்

பசும்பொன்னில் நாளை தேவர் குருபூஜை அமைச்சர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் நாளை (30.10.2022) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 வது பிறந்த நாள் விழா மற்றும் 60 வது குரு பூஜை விழாவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு, ஊக்குளிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள...
தமிழகம்

தேனியில் பொதுசுகாதாரத்துறையின் 100 வது ஆண்டை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்

தேனியில், மாவட்ட விளையாட்டுத் திடலில், பொதுசுகாதாரத்துறையின் 100 வது ஆண்டை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன், 100 மீட்டர் விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தார். பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100-வது ஆண்டு நடைபெறுவதால், சுகாதாரத்துறை சார்பில் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில்,தேனி மாவட்ட விளையாட்டுத் திடலில் பொது சுகாதாரதுறை சார்பில் நூறாவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமையேற்று, 100 மீட்டர் விளையாட்டு போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொது சுகாதார துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, நிர்வாக அலுவலர் மணிசேகரன், நேர்முக உதவியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த நிகழ்ச்சியை ஒட்டி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,பேட்மிட்டன், லக்கி கார்னர், இசைநாற்காலி போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில், முதல் மூன்று...
தமிழகம்

புதிய வழித்தடங்களில், அரசு பேருந்துகள் : அமைச்சர் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி, கொடிமங்கலம் ஊராட்சிகளில் , மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்ததார். பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் ஒன்றாக சாலைப் போக்குவரத்து உள்ளது. ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு செல்லவும் மாணவ மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும் பொதுப் போக்குவரத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் , அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச...
தமிழகம்

மதுரை செல்லூர் கனகவேல் காலனி பகுதியில் மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயத்தில் இருப்பதால் மக்கள் சாலை மறியல்

மதுரை 4வது வார்டுக்கு உட்பட்ட ஆபீஸ்சர்ஸ் டவுன்,கனகவேல் நகர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் தேங்கியுள்ள மழை நீரில் கழிவு நீரும் சேர்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுவதாகவும்,பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் மேலும் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செல்லூர் பிரதான சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வி காளமேகம்...
தமிழகம்

மதுரையில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது

மதுரை கீரைத்துறை சுடுகாட்டு பகுதியில் கஞ்சா கும்பல பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது தகவலை அடுத்து துணை ஆய்வாளர் சந்தான போஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இரவு மின்சார சுடுகாடு பகுதிக்கு ரோந்து சென்றனர். அங்கு 6பேர் கும்பல் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது 4 பேரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட 4 பேரிடமும் சோதனை நடத்தினர். அவர்களிடம் 1.450 கிலோ கஞ்சா,மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி, சங்கு பிள்ளை மடம் முருகன் மகன் மணிகண்டன் என்ற ஒன்னரை மணி (22). சிந்தாமணி, வீமாபிள்ளை சந்து முருகன் மகன் மணிமாறன் என்ற குட்டை...
தமிழகம்

தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் செயல்பாடுகள்

தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் கீழ் வீடுகளில் உருவாகும் மக்காத கழிவுகளில் இருந்து பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அழகு பொருட்கள் தயாரிக்கும் போட்டி மாணவ மாணவியருக்குநகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகராட்சி சேர்மன் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் போடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அனைத்து பள்ளிகளில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்காத குப்பைகளில் இருந்து அழகு சாதன பொருட்கள் பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்தனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பாகபரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் நகர்மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செல்வராணி நகர்மன்ற...
1 447 448 449 450 451 545
Page 449 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!