தமிழகம்

தமிழகம்

இனிமேல் வாரம் ஒரு காற்றழுத்தம்: ஜனவரி 24 வரை தமிழகத்தில் மழை பெய்யும்

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இது அடுத்த 48மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இலங்கை அருகே தற்போது நீடித்து வரும் காற்று சுழற்சி இன்று காலையில் வலுவிழந்து, மெலிந்த காற்று சுழற்சியாக மாறியுள்ளது. இது இன்று மாலைக்குள் முற்றிலுமாக செயலிழந்து விலகும். இது தவிர, கேரளா அருகே நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து சென்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி வடக்கு நோக்கி சென்று, குஜராத் பகுதிக்கு சென்று கரையைக் கடக்கும். இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் நேற்று இரவு தாய்லாந்து வளைகுடாப் பகுதிக்கு நுழைந்து,...
தமிழகம்

ஒமிக்ரான் வைரஸ்: 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு

பின் வரும் நாடுகளில் ஒமிக்ரான் கோவிட் பரவல் இருக்கலாம் என்பதால் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. High risk நாடுகள் என்றும் இவற்றை வரையறுத்துள்ளது. 1.பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் 2. தென் ஆப்பிரிக்கா 3. பிரேசில் 4. வங்கதேசம் 5. போட்ஸ்வானா 6. சீனா 7. மொரிசியஸ் 8. நியூசிலாந்து 9. சிம்பாப்வே 10. சிங்கபூர் 11. ஹாங்காங் 12.இஸ்ரேல் தமிழகத்தின் சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, கோவை, மதுரை திருச்சி, என நான்கு நிலையங்களிலும் தலா ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தொடர்பு எண்கள் மருத்துவத்துறையால் வழங்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள். 1.Rt pcr நெகடிவ் சான்றிதழுடன் தான் விமானத்தில் வந்திருக்க வேண்டும். 2....
தமிழகம்

உறுப்பினர்கள் வாக்களித்து ஒற்றை தலைமையை தேர்வு செய்ய வேண்டும் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்படுவதால் பாதகமே அதிகம்: அன்வர்ராஜா மீண்டும் போர்க் கொடி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த வாரம் புதன்கிழமை சென்னையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேசும்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவரை ஒருமையில் பேசியதுடன், அவரை அடிக்கவும் சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பற்றி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அன்வர் ராஜா கூறினார். அன்று நடந்த கூட்டத்தில் பலரும், அதிமுக கட்சியின் தலைமைக்கு எதிராக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் கட்சி தலைமையை விமர்சித்து வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அன்வர்ராஜா நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2021 மே மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக...
தமிழகம்

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! எங்கெல்லாம் மழை பெய்யும்?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் , கன்னியாகுமரி , நெல்லையில் இன்று கனமழை பெய்யும் என , சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை மைதயம் கணித்துள்ளது . இதனால் , கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று இடி , மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பான்மையான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தெற்கு அந்தமான்...
தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர்,நாகை, திருவாரூர், தஞ்சை மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
தமிழகம்

வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு

வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று அதிகாலை 4.47 மணியளவில் வேலூரை மையமாக கொண்டு பூமிக்கடியில் 25 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவான இந்த நில அதிர்வால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த வெள்ளியன்று மிஜோரத்தின் தென்வாலில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதே நிலஅதிர்வு வடகிழக்கு மாநிலங்களிலும் பங்களாதேஷின் ஒரு சில நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிகிறது....
Uncategorizedதமிழகம்

பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்

இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி கன்னடம், நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1,300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார். மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிவசங்கரின் சிகிச்சைக்கு...
தமிழகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு

தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக குரூப்-1, குரூப்-2 குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால், குரூப்-1, குரூப்-2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத் தேர்வும் நடைபெறும். நேர்முகத் தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகள் வருகின்றன. அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்கள் குரூப்-2-ஏ...
தமிழகம்

29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி : இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கடலூர் ,விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ,திருச்சி ,தஞ்சாவூர், நெல்லை ,நாகை ,புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,சேலம், மயிலாடுதுறை ,கள்ளக்குறிச்சி ,வேலூர் ,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக சென்னையை பொருத்தவரை செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குமரி கடல் அருகில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வரும் 29ம் தேதி அந்தமான் அருகே உருவாக உள்ள காற்றழுத்த...
தமிழகம்

கனமழை எதிரொலி: 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக, 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வரும் 28ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை* சென்னை* மயிலாடுதுறை* தேனி* திண்டுக்கல்* விருதுநகர்* தென்காசி* திருநெல்வேலி* தூத்துக்குடி* தஞ்சாவூர்* அரியலூர்* பெரம்பலூர்* நாகை* புதுக்கோட்டை* கடலூர்* கன்னியாகுமரி* விழுப்புரம்* திருவாரூர்* திருச்சிபள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை* மதுரை* சிவகங்கை* ராமநாதபுரம்* கள்ளக்குறிச்சி* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* திருவள்ளூர்* திருவண்ணாமலை* நாமக்கல்2 நாட்கள் விடுமுறைபுதுச்சேரி,...
1 447 448 449 450 451 498
Page 449 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!