தமிழகம்

தமிழகம்

திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை 20- க்கும் மேற்பட்டோர் முற்றுகை – கடந்த ஆட்சி காலத்தில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு, வீட்டுமனை பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள பத்தாவது வார்டு பகுதியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு இதுவரை, வீட்டுமனை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், நகராட்சி கவுன்சிலர் ஜாஹூர் உசேன் ரம்ஜான் பேகம் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தங்களுக்குரிய பட்டா வழங்க கோரி 20 - க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், முற்றுகையிட்டனர் . கடந்த ஆட்சிக்காலத்தில் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு, அதிமுக - வினருக்கு சாதகமாக உள்ளவர்களுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கியதால், தாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா கேட்டும் இதுவரை பட்டா வழங்காததால், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் அன்புமணி ராமதாஸை, தமிழக முதல்வர் ஆக்கிட வலியுறுத்தி விரைவில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் – பா.ம.க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அன்புமணி ராமதாஸை தமிழக முதல்வராக்கிட வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கன்னையா, மாவட்ட செயலாளர் வீரக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்கள் சக்தி யேந்திரன், சோலைமுத்து, மாவட்ட பொருளாளர் கஸ்தூரி, நிர்வாகிகள் தெய்வம், மகேஸ்வரன், ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜாராம் வரவேற்றார். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் ,மாநில பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் கவிஞர் திலகபாமா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . மேலும் நிர்வாகிகள் நடராஜன் ,செந்தில்குமார், ராஜ்குமார், செல்வம், மாரிச் செல்வம் ,மதுரை வீரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்...
தமிழகம்

கீழக்கரை டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் மத்திய அதிவிரைவு படையினர் மற்றும் காவல்துறையினர் சார்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் இருந்து கடற்கரை வரை கடற்கரை வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் தமிழக காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் மத்திய அதிவிரைவு படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து கீழக்கரை காவல் நிலையத்திலிருந்து கடற்கரை வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றன.  மேலும் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக தெரிவித்தனர். செய்தியாளர் சந்தோஷ் சிவம்...
தமிழகம்

கெங்கவல்லி அருகே அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற மருத்துவர்

சேலம் மாவட்டம் கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா 31 இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சேர்ந்த மருத்துவர் புகழ் என்பருடன் திருமணம் நடந்தது கர்ப்பிணியான ஹர்ஷிதா தான் பணியாற்றும் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டார் வந்தார்.  இந்த நிலையில் 20 தேதி அவருக்கு பிரசவ வழியில் ஏற்பட்டதும் கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார் அவருக்கு 21ஆம் தேதி சுகபிரசவத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது இதை அடுத்து தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் அலுவலக வேலுமணி மற்றும் மருத்துவர் அரசு மருத்துவர் ஹர்ஷிதா நேரில் வாழ்த்து கூறினார் இது குறித்து அரசு மருத்துவர் ஹர்ஷிதா கூறுகையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக தற்போது அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்ட வசதி...
தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்திற்கு மெத்தை, புத்தாடை வழங்குதல்

மதுரை, திருநகர் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு உண்ணுங்கள், பருகுங்கள், வீணாக்காதீர்கள் குழுவின் சார்பாக செல்வாபிரபு கெமிக்கல்ஸ் உரிமையாளர் செந்தில் குமார் அவர்கள் 10 மெத்தைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கினார். இந்நிகழ்வில் இல்ல மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் சமூக சேவகர்கள் ஷேக்மஸ்தான், நூருல்லாஹ் கலந்து கொண்டனர்....
தமிழகம்

பாதுகாப்பாற்ற முறையில் திரிந்த மூதாட்டியை மாவட்ட நீதிமன்ற உத்தரவுபடி மீட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம்

மதுரை மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கிணங்க சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி திரிந்து வந்த முதியவர் ராமலட்சுமி (வயது 62) என்பவருக்கு வழங்கப்பட்ட உத்தரவின் படி அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் மூலம் பராமரிப்பு தொகையுடன் முதியோர் இல்லத்தில் பாதுகாப்புடன் தங்குவதற்கு இன்று மாவட்ட சமூக நல அலுவலர் திருமகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர் வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 வாயிலாக திருநகரில் உள்ள சுரபி அறக்கட்டளை நடத்தும் தாய்மடி முதியோர் இல்லத்தில் முதியவரை சேர்த்து பாதுகாப்புடன் தங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  தாய்மடி இல்ல நிர்வாகி சேதுமுத்துராஜிடம் முதியவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியான்பேட்டைசோதனை சாவடியில் 7 கிலோ கஞ்சா சிக்கியது 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை ஆந்திர மாநில சோதனை சாவடியில் மதுவிலக்கு மற்றும் உள்ளூர் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்றுஇரவு காட்பாடி காவல் துறையினர்வேலூரை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்தபோது இந்த தேசத்திற்கு இடமாக இருந்த பையை சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த பையை வைத்திருந்த வேலூர் மாவட்டம் வாலாஜா சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நந்தகுமார்(25)மற்றொரு நந்தகுமார்(22)ஆக இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது அவர்களிடம் இருந்த7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

ராஜபாளையம் மயூராநாத சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட பெண் கணக்கர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு பத்தியப்பட்ட இந்த கோயிலில் செயல் அலுவலராக ராஜா செயல்பட்டு வருக்கிறார். இங்கு தட்டச்சராக பணியாற்றும் சாந்தி என்பவர் . கூடுதலாக கணக்கர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சந்தோஷ்குமார் என்பவர் வாடகை செலுத்திய ரசீது அடிக்கட்டு புத்தகத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த செயல் அலுவலர் ராஜா குத்தகைதாரர் சந்தோஷ் குமாரிடம் விசாரித்ததில் ரூ.1 லட்சம் வாடகை செலுத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அளித்தார்.  மேலும் கணக்கர் சாந்தி முக்கிய நாட்களில் நடைபெறும் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட விழாக்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளுக்கு உரிய ரசீது வழங்காதது மேலும் அரசால் வழங்கப்படும்...
தமிழகம்

மதுரையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் குதிரை பலி

மதுரை புது ஜெயில் ரோடு, மஹபூப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையில் சில குதிரை மற்றும் கோவேரி கழுதைகள் கேட்பாடற்ற முறையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரிந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு காளவாசல் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் சாலையில் குறுக்கே வந்த குதிரை மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் குதிரை பலியான நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு படுக்காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குதிரைகள் மற்றும் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரையில் வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தில் விவசாய நிலம் வாங்கி செட்டில் ஆன திருடனை பிடித்த தனிப்படை போலீசார்

மதுரை மாநகரில், நீண்ட காலம் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி இரவு மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட துரைசாமி நகரில் வசித்து வரும் ரவீந்திரன் என்பவரின் வீட்டிலிருந்து 58 பவுன் தங்க நகைகள், 9.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் DBBL இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகியவைகளை திருடிச் சென்றவழக்கில் தொடர்புடைய, மதுரை சக்கிமங்கலம் முனியாண்டிபுரத்தை சேர்ந்த பெஞ்சமின், (வயது 33) என்பவரை கைது செய்து விசாரித்த போது, பெஞ்சமின் மீது மதுரை நகர், மதுரை மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 20 திருட்டு வழக்குகள் இருப்பது...
1 347 348 349 350 351 546
Page 349 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!