தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட கூடிய கிறிஸ்தவர்களுக்கு பேராலயத்திற்கு மதுரை பாத்திமாநகர் சர்ச் மற்றும் ஞானஒளிவுபுரம் சர்ச் நேரடியாக சென்று வாழ்த்துக்களையும் கேக் வகைகள் கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கேக் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வு மதுரை துணை மேயர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
