ராஜபாளையம் அருகே சேத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 537 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த காவல் துறையினர் குட்கா கடத்தி வந்த ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளதுடன் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....










