திருமங்கலம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் நடைபெறும் கட்டுமான பணிகளை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, கடந்த பல வருடங்களாக திறந்த வெளியில் செயல்பட்டு வந்ததால், மழைக்காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகமெங்கும் உள்ள நெல் மூடைகள் சேமிப்பு கிடங்குகளை பாதுகாப்பதற்காக , இரும்பினால் ஆன கூடாரங்கள் அமைத்து நெல் மூடைகளை பாதுகாக்க உத்தரவிட்டதையடுத்து, தோப்பூரில் அமைந்துள்ள கிட்டங்கியில் 18000 டன் மெட்ரிக் கொள்ளளவு கொண்ட நெல் மூடைகளை சேமிக்கும் அளவிற்கு, கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருவதை , தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறும் போது , தமிழ்நாடு முழுவதும் 213 கிட்டங்கியில் ரூபாய் 138 கோடியில் 2.86...
