சிறுகதை

சிறுகதை

பணத்தால் அடித்தாலும் வலிக்கும்

''நீ சின்ன பொண்ணும்மா... உனக்கு அந்த பையனோட அழகும், வேலையும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். அதுக்கு மேலயும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை புரிஞ்சுக்கோ.” “அழகை மட்டும் பார்த்து முடிவு பண்ற அளவுக்கு நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லைப்பா. எனக்குத் தெரிஞ்ச வரை அவருக்கு பெரிசா கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. நல்ல வேலையில இருக்கார். அவர் சொல்றத வச்சுப் பார்த்தா… நல்ல ஃபேமிலின்னுதான் தோணுது. வேற என்ன...
சிறுகதை

சாலியின் பொதுத்தேர்வு பயணம்

பர்வீன் வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி. எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவரின் அன்பு கணவர் கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருக்கு வாரிசுக்கு ஒரு மகன் சாலி, ஆசைக்கு ஒரு மகள் ஜீனத் உண்டு. தான் உயர்கல்வி படிக்கவில்லை என்றாலும் தன் பிள்ளைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர். சாலி மிகவும் சுறுசுறுப்பான சிறுவன். ஆறாம் வகுப்பு 'E' நிலையில் படிக்கும் மாணவன்....
சிறுகதை

பெற்றால் தான் பிள்ளையா?

" நீயும் வந்துட்டு வாயேன் பவி".. என்றான் சந்திரன். 'அதெல்லாம் வேண்டாம்..நீங்க மட்டும் போயிட்டு வாங்க..' என்றாள் பவித்ரா. 'ஜனனியாவது கூட்டிட்டு போயிட்டு வரேன்..' என்றான் சந்திரன். 'அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..சின்ன பிள்ளையை அங்கெல்லாம் கூட்டிட்டு போய்கிட்டு..' வழக்கம் போல சிடுசிடுத்தாள் ... பவித்ரா. பேச ஒன்றும் வழி இல்லாமல் சரி என்றான் சந்திரன். புருஷோத்தமன் - மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் ஒரே மகன் சந்திரன். வசதி வாய்ப்புகளுக்கு கொஞ்சமும்...
சிறுகதை

அவனின் கனவு இவளின் நிலை

கோவிலூர். கோவிலூர் என்ற பெயருக்கேற்றாற்போல் கோவில்கள் நிறைந்த ஊர். கோவிலுக்கு அருகாமையில் குளம், குளத்தை சுற்றி வீடுகள், எங்கும் பசுமை, விவசாயம் பயிரிடும் மக்கள், அமைதியான ஊர் என செழுமையாக இருந்தது. சுருள் சுருளான தலைமுடியும், அடர்ந்த புருவமும், வசீகரிக்கும் கண்களும், சாந்தமான முகமும் கொண்ட இளைஞன் சுதன். நன்றாக பாடும் திறமைசாலியும் கூட. Jதினமும் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பெண்ணை பார்க்கிறான் அவள் கண்களுக்கு கண்மை தீட்டவில்லை,...
சிறுகதை

ஏமாற்றம் கண்டும் துவண்டு போகவில்லை

அன்று ஒரு நாள் சனிக்கிழமை காலை பர்ஸானும் அவனது தாயும் கொழும்பு பஸ்ஸிற்காக காத்து நின்றனர். அப்போது அதிவேகப் பாதைகள்எதுவுமே இல்லாத காலம் காத்திருந்து காத்திருந்து ஒரு பஸ் வந்தது பர்ஸானும் தாயும் அதிலே ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டனர். நல்ல கிராமத்து தயிர் சட்டி நான்கும் எடுத்துக் கொண்டு இருவரும் கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். அவர் முதல் முதலாக கொழும்பை நோக்கி பயணம் செய்வதால் உள்ளத்தில் பல...
சிறுகதை

புதிரான புரிதல்

சிறுகதை : மௌனங்களை மீதமாய் சுமத்திக்கொள்ளும் மேகங்களின் வெள்துணி அணிநடை சோகமானதாய்த் தோன்றிட, பலமிழந்த தென்றலின் தழுவுதல்கள் பிரம்மையில் வீழ்த்திக்கொண்டிருந்ததா? இமைக்கடங்கா கருவிழிகள் இமைத்துக்கொள்ள அத்துணை ஆர்ப்பரித்தலில் தொலைந்தேன்.  தங்கம் பதினெட்டை அடைந்திருந்தாள்.  வீட்டுல சொந்தங்கள் அவளுக்கு கலியாணம் செய்து பார்க்க ஆவலில் மூழ்கிப் போனார்கள். யன்னலருகில் தையல் மிசின், தடதடவென மிதித்துக் கொண்டிருப்பாள். அவளிலும் ஐந்து வயது மூத்தவன் நான். காலையில் நாலுக்கெல்லாம் விழித்துக் கொள்வாள்.  பொழுதின் ஆதிக்கடன்...
இலக்கியம்சிறுகதை

டாய்புண்

அந்தி சாய்ந்த நேரம். கதிரவன் படுக்கைக்கு செல்ல சந்திரன் காவலுக்கு பொறுப்பேற்றான். மூன்று வயதான செல்ல பிள்ளை பிபுவோடு அப்பா ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார். பிபுவுக்கு எல்லா குழந்தைகளை போல பல நிறங்களான பந்துகளோடு விளையாடுவது மிகவும் அதிகமாக பிடிக்கும் ஒன்று. அப்பா மஞ்சள் நிற பந்தை எடுத்து பிபுவிடம் உருட்டி விடுவார். பிபு பிடித்த அந்த பந்தை மீண்டும் அப்பாவை நோக்கி உருட்டி அல்லது தூக்கி எறிவான். ஒருமுறை...
இலக்கியம்சிறுகதை

புதுசா ஒரு பிறந்த நாள்…

கார் பொறுமையாக சென்று கொண்டிருந்தது . காரை ஓட்டிக் கொண்டிருந்த முருகேசன் திரும்பி மனைவியை பார்த்தார் ..அவளது முகத்தில் ஏகப்பட்ட சலணம். வழக்கத்திற்கு மாறாக வாய்மூடி வரும் கௌசல்யாவின் மௌனம் அவர் அவரை கலவரப்படுத்த “என்ன கௌசல்யா !என்ன ஆச்சு ?உடம்பு சரியில்லையா ?” அவரது கேள்வியில் சற்று நிதானப்பட்டவள்,  “இன்று கோர்ட்ல ஒரு கேசுங்க... ரெண்டு பேரும்  காதல் திருமணம் செய்து இரண்டு வருஷம் ஆகுது .அதுக்குள்ள டைவர்ஸ்...
இலக்கியம்சிறுகதை

காக்கை குருவி எங்கள் ஜாதி…

விடியல் காலை ஐந்து மணி.. ஏர்க்கலப்பையை தோளில் சுமந்தபடி கிளம்பினார் சின்னையா. பெரிய லோட்டா நிறைய நீராகாரத்தை நீட்டி இதைக் குடிச்சிட்டு கிளம்புங்க.. நெற்றியில் திருநீறு பூசியபடி வந்தவர் திண்ணையில் அமர்ந்து நீராகாரத்தை பருகியவர் பன்னண்டு மணிக்கு சாப்பாடு எடுத்து வந்துடு புள்ள.. இப்பல்லாம் பசி தாங்க முடியல.வெளவெளன்னு வருது. சரிங்க மாமா.. பத்து மணிக்கு அந்த வேலுப்பயலை கொஞ்சம் அனுப்பி வைங்க.. நான் கேப்பைக்கஞ்சி கொடுத்து அனுப்பறேன்.அலுப்பு பாக்காம...
இலக்கியம்சிறுகதை

உப்புக்கண்டம்

அன்றைக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவின் மூன்றாம் நாள் விடையாத்தி நிகழ்ச்சி! ஒவ்வொரு குடும்ப வகையறாவும் ஓர் ஆடு பிடித்து அறுத்து அதன் இறைச்சியைக் கூறு போட்டுப் பிரித்துக் கொண்டார்கள். அப்பொழுதெல்லாம் கள் குடிக்கும் வழக்கம் உண்டு. சாராயமும் கூட. கோவில் திருவிழா என்றால் வீட்டின் முன் மாவிலை, தென்னங்குருத்தில் செய்த தோரணம், குலை ஈன்று இருக்கும் வாழைமரம்,ஈச்சங்குலை ஆகியன வாயிலின் இருபுறமும் கட்டித்தொங்கவிட்டிருப்பர். சீரியல் மின்விளக்கும் ஒளிரும்.அதைப்பார்த்தாலே திருவிழா களைகட்டி...
1 2 3 4 9
Page 2 of 9

Right Click & View Source is disabled.

error: Content is protected !!