கட்டுரை

கட்டுரை

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1938).

கோ.நம்மாழ்வார் (G.Nammalvar) ஏப்ரல் 6, 1938ல் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரின் தந்தை ச.கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007ம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில்...
கட்டுரை

டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்த நோபல் பரிசு வென்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1928).

ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) ஏப்ரல் 6, 1928ல் சிகாகோவில் மிட்செல் மற்றும் ஜேம்ஸ் டி. வாட்சன் ஆகியோரின் ஒரே மகனாகப் பிறந்தார். தந்தை ஒரு தொழிலதிபர் காலனித்துவ ஆங்கில குடியேறியவர்களிடமிருந்து அமெரிக்காவிற்கு வந்தவர். வாட்சன் சிகாகோவின் தெற்கே ஹோரேஸ் மான் இலக்கணப் பள்ளி மற்றும் தெற்கு கடற்கரை உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பொதுப் பள்ளிகளில் பயின்றார். அவர் பறவைகளைப் பார்ப்பதில் ஈர்க்கப்பட்டார், அவரது தந்தையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட...
கட்டுரை

ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார்- உலக அறிவாளிகள் /முட்டாள்கள் தினம் இன்று (ஏப்ரல் 1)

உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள்வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். ஆனால், தினம் தினம் ஏதோ ஒருவகையில் நம் அறிவை மேம்படுத்தியவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நாளான `அறிவாளர்கள் தினம்’ பற்றி எத்தனை பேருக்குத் தெரியும். இந்த...
கட்டுரை

புரிதல் இருந்தால் எந்த உறவிலும் விரிசல் வராது

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல், எந்த ஒரு சொல் செயலுக்கும் வெவ்வேறு கோணங்கள் இருக்கும். நீங்கள் பார்க்கும் கோணம் வேறு மற்றவர் பார்க்கும் கோணம் வேறு என்ற புரிதல் இருந்தால் எந்த உறவிலும் விரிசல் வராது. உதாரணமாக parallax என சொல்லப் படும் இந்த கோணமாற்று பயிற்சியை நீங்களே செய்து பாருங்கள் .  நீங்கள் அமைதியாக ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு உங்களுடைய இடது கையால் இடது...
கட்டுரை

மின்சுற்று விதி, நிறப்பிரிகை மற்றும் வெப்பக் கதிர்வீச்சு விதி ஆராய்ச்சி செய்த குஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப் பிறந்த தினம் இன்று (மார்ச் 12, 1824)

குஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப் (Gustav Robert Kirchhoff) மார்ச் 12,1824ல் கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கோயின்க்ஸ்பேர்க்கில் கல்வி கற்றார். பிறகு அல்பெனிய பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1833 ஆம் ஆண்டில் கோனிஸ்ஸ்பெர்க் நகரில் ஒரு கணித-இயற்பியல் கருத்தரங்கை பிரான்சு நியூமன் மற்றும் ஜாகோபி ஆகியோருடன் இணைந்து உருவாக்கியதுடன், அவர்களது மாணவர்கள் ஆராய்ச்சியின் முறைகள் அறிமுகப்படுத்தினர். கிர்ஹோஃப் 1843 முதல் 1846 வரை நியூமன்-ஜாகோபிய கருத்தரங்கில்...
கட்டுரை

நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் நினைவு தினம் இன்று (மார்ச் 11, 1955)

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) ஆகஸ்ட் 6, 1881 ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது. தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச்...
கட்டுரை

இயல் நிலைக்கு மாறாக நுண்ணோக்கி (Phase-contrast microscopy) கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற பிரிட்சு செர்னிக்கி நினைவு தினம் இன்று (மார்ச் 10, 1966)

பிரிட்சு செர்னிக்கி (Frits Zernike) ஜுலை 16, 1888ல் வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் நகரில், பிறந்தார். தந்தையும் (கார்ல் ஃபிரடெரிக் ஆகஸ்டு செர்னிக்கி), தாயும் "(அன்சி தீபெரின்க்)" கணித ஆசிரியர்களாக அமைந்திருந்த செர்னிக்கிகிக்கு, தனது தந்தையை போலவே இவருக்கும் இயற்கையாகவே இயற்பியலில் ஆர்வம் அதிகரித்திருந்தது. தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த பிரிட்சு, பெற்றோருடன் இணைந்து மிகவும் சிக்கலான கணக்குகளுக்கு...
கட்டுரை

உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு பேசப்பட்ட தினம் இன்று (மார்ச் 10, 1876)

தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மார்ச் 10, 1876ல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள் உங்களைக் காண வேண்டும்” "(Watson, come here, I...
கட்டுரை

விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) பிறந்தநாள் இன்று (மார்ச் 9, 1934)

யூரி காகரின் (யூரி அலெக்ஸேய்விக் காகரின்) மார்ச் 9, 1934ல் கஜட்ஸ்க், குளூசினோ, இரசியாவில் பிறந்தார். அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க், அவர் மறைந்த பின் ‘ககாரின்’ எனும் அவரது பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை யூரி அலெக்ஸிவிக் ககாரின். மாஸ்கோவில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இளைஞனாக இருந்தபோது, காகரின் ஒரு ரஷ்ய யாக் போர்...
கட்டுரை

நாளுக்கு நன்றி சொல்லுங்கள்

ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடன் அந்த நாளுக்கு நன்றி சொல்லுங்கள். அது போல் அன்றைய இரவு தூங்கப் போகுமுன் ஒரு பயிற்சியாக நினைத்து உங்களுக்கு நடந்த மூன்று நல்ல செயல்களை நினைவு கூர்ந்து அதற்காக நன்றி சொல்லுங்கள். அந்த மூன்று, இன்னும் பல நடந்த நல்லவைகளை உங்களுக்குள் நினைவு வர செய்யும். அது இன்னும் பல பாஸிடிவான நிகழ்வுகளை உங்கள் வாழ்க்கையில் ஈர்க்கும். தவிர, அந்த மாதிரி இரவில் நினைத்து...
1 2 3 4 10
Page 2 of 10

Right Click & View Source is disabled.

error: Content is protected !!