கட்டுரை

கட்டுரை

“இன்றைய பொம்மை நாளைய செம்மை ” – நூல் விமர்சனம்

சமுதாய ஆவலும் தமிழ் மீதான காதலும் அதிகம் கொண்ட அன்பு இளவல் பாக்கி, "ஒளித்துவைத்த பொம்மை" என்ற தலைப்பில் தனது கவிதைகளை தொகுத்து தந்திருக்கிறார். இத்தொகுப்பில் பல கவிதைகள் ஒளித்துவைத்த பொம்மையாய் இல்லாமல் வெளிப்படுத்தப்பட்ட செம்மையாகவே சிறப்பு சேர்க்கின்றன. கடலோரத்து நகரமான சுந்தர பாண்டியன் பட்டினத்தில் பிறந்து வந்த பாக்கியின் மனதுக்குள் கவிதையின் அலைகள் ஓயாமல் மோதுகின்றன. அந்த அலைகளின் சுவடுகள் இந்தத் தொகுப்பிற்குள் காணப்படுகின்றன. மழலை பேசும் மொழிகள்...
கட்டுரை

ஓ தமிழா..?!

பாம் ஜுமைராவின் க்ரஸென்டில் அமைந்துள்ள போர்ட்வாக்கில் நடப்பது எப்போதுமே ஒரு இனிய அனுபவம்தான். துபாயின் கட்டிடக் கலையின் புது வரவான ராயல் அட்லாண்டிஸிற்கு எதிரில் நடை மேடையில் மாலை நேர சூரியனை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தேன். அட்லாண்டிஸின் அழகை ரசிக்க வந்தவர்கள், நடை பழகுபவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள், ஸ்கேட்டிங்க் செல்பவர்கள் என அந்த இடமே ஒரு சுற்றுலா பொருட்காட்சிபோல் கலகலவென்று இருந்தது. எத்தனை விதமான மனிதர்கள்? எந்தெந்த நாட்டிலிருந்தெல்லாமோ, உலகின்...
கட்டுரை

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் – 2

இன்று சிக்கன்-65 ஒரு சர்வதேச உணவாக இருக்கிறது. இந்த பெயர் தெரியாத தமிழர்களே இருக்க இயலாது. ஆனால், இது சென்னையில் உள்ள புஹாரி உணவகம் 1965 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய உணவு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த உணவகத்தை 1951 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் துவங்கியவர்   திரு. ஏ.எம். புஹாரி. ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பைன் டைனிங் (Fine Dining)  முறையில் தென்னிந்திய உணவுகளை பரிமாறிய...
கட்டுரை

தமிழ்த் திரையுலகில் பெண்ணின் புனைவு

மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதில் திலையுலகம் முக்கிய பங்கு வகிக்கிறது.  மக்களின் எதார்த்த சூழல்களையும், போராட்ட நிகழ்வுகளையும் நம் மனக்கண் முன் நிகழ்த்துவதில் திரையுலகம் இன்றியமையாததாக செயல்படுகிறது. இதில் பெண்  கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது  எனலாம். இலக்கிய உலகில் ஒரு பெண்ணின் புனைவு நுகர்வு பொருளாகவே பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதைத்தான்டி கலை உலகில் அவள் எப்படிப் பார்க்கப்படுகிறாள் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பெண் புனைவு : ஆணின்...
கட்டுரை

காவல் சுவடுகள் – நூல் விமர்சனம்

இருளைச் சுற்றியிருக்கும் பெரு வெளிச்சம் : காவல் துறை. அவரவர்களுக்கான துயரங்களை அவரவர்களே எழுதித் தீர்க்க வேண்டும். அதிலும் காவல் துறை சார்ந்த துயரங்களை ஒரு காவல் துறைப் பணியாளரே கவிதையில் எழுதுவதென்பது இதுவரை சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இப்போது அதனை மா.ஆனந்தன் (வசந்தன் )சாத்தியமாக்க முயற்சித்துள்ளார். அது பாராட்டுக்குரிய ஒன்று. ஒரு மாதாந்திர நாள்காட்டியின் சிவப்பு நிற விடுமுறை நாட்களை நம் குடும்பத்தினர் பார்ப்பதற்கும் ஒரு காவல் துறை...
கட்டுரை

“வான்காவின் தகன மஞ்சள்” – நூல் விமர்சனம்

(துரோகத்தின் முதுகை உடைக்கும் வினையின் வாள்) வசந்தனின் "வான்காவின் தகன மஞ்சள்" கவிதை நூலினை முன் வைத்து.) இவ் வாழ்வு எப்படியானது ஐயமேயில்லாமல் இது வலிகள் மிகுந்தது. பிறகு? இரணங்களை மேலே அப்பி விட்டு ஒரு கள்ளப் புன்னகையோடு கடந்துப் போவது. அப்புறம்? சூட்சுமக் கயிற்றில் சுருக்கிட்டு சோக உத்திரத்தில் தொங்க விடுவது.? அடுத்து? எல்லா சிறகுகளையும் அறுத்து விட்டு பறக்கச் சொல்லி நிர்ப்பந்திப்பது.. மேலும்..? போதும் போதும் வாழ்க்கையின்...
கட்டுரை

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்

புரட்சித்தலைவன் ஆன கதை ஒரு நடிகர் மக்களிடையே செல்வாக்கு பெற்று, ஒரு அரசியல் தலைவராய் உருவாக வும், முதலமைச்சராகவும் முடிந்ததென்றால் அது மகத்தான சாதனை.  அந்தச் சாதனை நிகழ்த்தியவர் எம்.ஜி.ஆர் என்று அறியப்படும் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். ஒரு நாளில் அந்தச் சாதனை நிகழ்ந்து  விடவில்லை. பல்லாண்டு கால கடின உழைப்பு அதன் பின்னணியில் இருந்திருக்கிறது. 1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் இலங்கை கண்டியில்  பிறந்தார் எம்.ஜி.ஆர். தந்தை கோபால மேனன்,...
கட்டுரை

நடுநிசியில் எரியும் மழை – கவிதை நூல் விமர்சனம்

ஆசிரியர் : வசந்தன் காய்ந்த முள்ளால் கீறி நலம் விசாரிப்பவர்களே,, உண்மையை சொல்பவனிடம் தான் உலகம் இப்படி நடந்து கொள்ளும் என்பது எத்தனை உண்மையான வாக்குமூலம்.,, காதல் மனதின் கல்லறைகளில், ஒளிர்வது விளக்கல்ல, அன்பின் ஆன்மா,, என்பது வசந்தன் அவர்களின் ஆன்மாவின் அகல் . கருணையின் நிழலில் கிடத்த இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஏங்குகிறது என்பதை நினைவுபடுத்தும் அந்தி அழகு. உடலை எரிக்காமல் புகையும் நெருப்பே தலைப்பாக...
கட்டுரை

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் -1

பீட்டர் பாண்டியன் அவர் பெயர் ரவுஸ் பீட்டர் (Rous Peter). பிறப்பால் ஆங்கிலேயர். பாசக்கார மதுரைக்காரர்கள் அவருக்கு இட்ட பெயர் பீட்டர் பாண்டியன். யார் இந்த பீட்டர் பாண்டியன் என அறிய நீங்கள் 200 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். ரவுஸ் பீட்டர் 1785 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஹார்லி என்ற இடத்தில பிறந்தவர். 1801 ஆம் ஆண்டு இந்தியா வந்து புனித ஜார்ஜ் கோட்டையில் எழுத்தராக சேர்ந்தார்....
கட்டுரை

லியோ பொது அறக்கட்டளை நடத்தும் ” போதையில்லாத தமிழகம் படைப்போம் ” போட்டிகள்

லியோ பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் தலைவர் RT உமாபதி s/o திருஞானசம்பந்தம் கடந்த 22 ஆண்டுகளாக லியோ பில்டிங் டெகோர்ஸ் & இன்டீரியர்ஸை நடத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். பின்னர், லயன்ஸ், ஜெய்சீஸ் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டவர். லியோ பொது அறக்கட்டளை அவரது அடித்தளம் மட்டுமே. இதன் மூலம்,...
1 2 3 4 5 10
Page 3 of 10

Right Click & View Source is disabled.

error: Content is protected !!