தமிழகம்

ராஜபாளையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

69views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், உலக மண் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி நடந்து வருகிறது. காந்தி கலை மன்றத்தில், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, மண்ணை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். மண் வளம் பாதுகாப்பில் அக்கறையுள்ளவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தி பழகி விட்ட பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அவசியம் பார்த்து பயன் பெற வேண்டும். அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கண்டிப்பாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பேசினார்.
இந்த சிறப்பு கண்காட்சி, நாளை 5ம் தேதி (திங்கள் கிழமை) வரை நடைபெறுகிறது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். கண்காட்சியில், ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, திருப்பூர் பாதுகாப்பு சங்கம் நிறுவன செயலாளர் வீரபத்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!