தமிழகம்

உண்டு உறைவிடப் பள்ளி மைய திறப்பு

34views
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  நரிக்குறவர் குழந்தைகளுக்கான உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தினை திறந்து வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், பையூர் பிள்ளைவயல் ஊராட்சிக்குட்பட்ட பழமலை நகர்ப்பகுதியில், நரிக்குறவர் குழந்தைகளுக்கான அமைக்கப்பட்டுள்ள உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், திறந்து வைத்து தெரிவிக்கையில்,  டாக்டர்.கலைஞர் ,  வழியில், சிறப்பாக தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் , அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்களை மேம்படுத்திட வேண்டும் என்ற அடிப்படையில், இலக்கு நிர்ணயித்து, அவ்இலக்கினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அதில், குறிப்பாக நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் நலன் காத்து வருகிறார். டாக்டர்.கலைஞர், நரிக்குறவர்கள் என்று அழைக்கப்பட்டதை நெரிக்குறவர்கள் என்று அழைத்து அவர்களுக்கு சான்றும் தந்தவராவார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் , நரிக்குறவர் இன மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, அவர்கள் விரும்புகின்ற தொழிலை தொடங்கி பயன்பெறுவதற்கு ஏதுவாக, வங்கிக்கடனுதவிகள் வழங்கிடவும் வழிவகை ஏற்படுத்தி, அவர்களுக்கு தேவையான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள அறிவுறுத்
தியுள்ளார்கள்.
மேலும், நரிக்குறவர் இன மக்கள் வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது, அவர்களை குழந்தைகளை பேணிப் பாதுகாப்பதற்கு ஏதுவாகவும், குறிப்பாக அழியா செல்வமான கல்வியை பெறுவதற்கும் உண்டு உறைவிடப் பள்ளியை ஏற்படுத்தி, அதன்மூலமும் அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 14 வயதிற்கட்பட்ட 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மொத்தம் 114 மாணாக்கர்கள் தங்கிப் பயிலுகின்ற வகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவருக்கு அரசின் சார்பில் உணவு மற்றும் தேவையான அனைத்து அடிப்படைப் பொருட்களுக்கென ஆண்டிற்கு ரூ.20,000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன் நோக்கம், தங்களது பிள்ளைகள் தரமான அடிப்படை கல்வியினைப் பெற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு அடிப்படையானதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் தங்களது பிள்ளைகள் அரசு வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் அடிப்படையாக இவை அமைகிறது.
உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதற்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான அரசு, தனிகவனம் செலுத்தி சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, மாணாக்கர்கள் தங்கிப் பயிலுவதற்கான அனைத்து அடிப்படைப் பொருட்களையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள், சீத்தாலெட்சுமி, பீட்டர் லெமாயு, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன்,
மாவட்ட ஊராட்சி துணைத்  தலைவர் அ..சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாமேரி, ஊராட்சி மன்றத்  தலைவர்கள் எஸ்.புவனேஸ்வரி (வாணியங்குடி), மணிமுத்து (காஞ்சிரங்கால்), வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, மேற்பார்வையாளர் ரூபாராணி, ஒலி, ஒளி அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு நிர்வாகி சைமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!