349views
விருதுநகர் தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தகக் கண்காட்சியில் தினமும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா, பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
புத்தகத் திருவிழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் கலந்து கொண்டார். புத்தக திருவிழா இலக்கிய அரங்கு நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் “வாசிப்பின் சாளரங்கள்” என்ற தலைப்பில் பேசினார். பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ராமச்சந்திரன் குழுவினரின் புத்தகங்களின் நோக்கம் அன்பை வளர்ப்பதா? அறிவை பெருக்குவதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது, நான் விருதுநகரைச் சேர்ந்தவன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.






