தமிழகம்

சிவகாசியில், குஜராத் தேர்தல் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த பாஜக கட்சியினர்

60views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பாஜக கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாஜக கட்சி தொடர்ந்து 7வது முறையாக வென்று சாதனை படைத்திருப்பதை, விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர். சிவகாசி சிவன் கோவில் அருகில் நகரத் தலைவர் பாட்டக்குளம் பழனிச்சாமி தலைமையில், பாஜக கட்சியினர் சரவெடிகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் குஜராத் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில், குஜராத் மாநிலத்தில் வெற்றி பெற்றதைப் போல நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று பாஜக கட்சியினர் உற்சாகமாக கூறினர்.
வெற்றி கொண்டாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் ஒலிம்பிக்செல்வம், மாவட்ட செயலாளர் குமரிபாஸ்கர், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், நகர பொதுசெயலாளர்கள் போஸ், மணிகண்டன், சங்கர், நகர செரலாளர்கள் மணிகண்டன், முட்டைக்கடை கணேசன், இளைஞரணி சதாசிவம், விளையாட்டுப்பிரிவு தலைவர் சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!