தமிழகம்

விருதுநகரில், தேச ஒற்றுமையை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள என்.சி.சி. அதிகாரிக்கு உற்சாக வரவேற்பு

62views
தேச ஒற்றுமையை வலியுறுத்தி, 3 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிக்கு, விருதுநகரில் உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கர்னல் பத்வார் (53). இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில், 90வது பட்டாலியன் என்.சி.சி. கமாண்டர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். தேச ஒற்றுமையை வலியுறுத்தியும், என்.சி.சி. அமைப்பு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையிலும், உலக சாதனை முயற்சியாகவும் கன்னியாகுமரியில் இருந்து, டெல்லி வரையிலான 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, விழிப்புணர்வு ஓட்டம் மூலமாக கடந்து சாதனை செய்து வருகிறார். விருதுநகருக்கு வந்த கர்னல் பத்வாருக்கு என்.சி.சி. அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கைகளில் தேசியக் கொடி ஏந்தி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!